கிடைக்கும் இதுக்காகதான் எல்லாரும் வருவாங்க, நீயும் படிக்கதானே வந்த அப்புறம் படிக்காம இருந்தா எப்படி”
”எனக்கு படிக்க பிடிக்கலை”
”அது உன் பிரச்சனை, இதுக்கும் காலேஜ்க்கும் சம்பந்தமில்லை நீ படிச்சா உனக்கு டிகிரி கிடைக்கும் படிக்கலைன்னா டிசி கிடைக்கும்”
”எனக்கு டிசியே கொடுத்துடுங்க”
”உங்கப்பா சொன்னதை கேட்டல்ல இப்ப டிசி வாங்கிட்டு வெளிய போய் என்ன செய்வ, வாழ்க்கையே கேள்விக்குறியாயிடும் அதை விட கஷ்டப்பட்டு ஒரு பார்டர்மார்க் எடுத்து பாஸாயிடு ஒரு டிகிரி வாங்கிடு போதும்”
”எனக்குதான் படிப்பு ஏறலைன்னு சொல்றேன்ல” என கோபமாகச் சொல்ல அவளோ அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு
”சரி உனக்கு பிடிச்ச மாதிரி நானே பாடம் எடுக்கறேன்”
”நீங்க எடுத்தாலும் எனக்கு படிப்பு ஏறாது”
”அதையும் பார்க்கலாம் இப்ப நீ உன் வகுப்புக்கு போ” என சொல்ல அவனோ வெறுப்புடனே சென்றான்.
கண்ணகியோ பலமாக யோசித்தாள்
”இவனைப் போல இன்னும் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியலையே பேசாம இவனைப் போல இருக்கறவங்களை ஒண்ணு சேர்த்து நாமளே வகுப்பு எடுக்கலாம், இதைப் பத்தி மாதவிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்” என நினைத்தவள் மாதவியை தேடிச் சென்றாள்.
அவளது வகுப்பில் அமைதியாக பாடம் நடத்திக் கொண்டிருந்தாள், மாணவர்களும் அவளது