”இனிமேல ஒழுங்கா படிக்காத மாணவர்களுக்கு நானே பாடம் எடுக்கறதா முடிவு பண்ணிட்டேன்”
“உங்களுக்கே ஏகப்பட்ட வேலை இதுல இந்த வேலை எதுக்கு அதுக்குதான் நாங்க இருக்கோமே”
”இருந்தும் இந்த 3 மாணவர்களால ஏன் படிக்க முடியலை”
”அது வந்து எப்படி சொல்றது அவங்களுக்கு படிப்பு ஏறலை அதான்”
”நான் பார்த்துக்கறேன்” என சொல்லியவள் அந்த 3 மாணவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியே சென்றவள் ஒவ்வொரு வகுப்பிலும் இருந்து தேறாத படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் மூலம் தேர்ந்தெடுத்து தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்தாள்.
அதோ இதோ என கிட்டத்தட்ட 80 மாணவர்கள் சேர்ந்துவிட்டார்கள், அவர்களை அழைத்துக் கொண்டு ஆடிட்டோரியம் சென்றாள், அங்கே அவர்களுக்கு பாடம் எடுக்கலானாள். அவர்களுக்கு பிடிக்கவில்லை, கவனிக்காமல் இருந்தார்கள், வெறுப்பாக நடந்துக் கொண்டார்கள் அதை பற்றி அவள் கவலைக்கொள்ளவில்லை, அவர்களை கல்லூரி மாணவர்களாக அல்ல பள்ளி மாணவர்களைப் போல நடத்தினாள்.
பரிட்சை வரும் வரை இதே வேலைதான் அவளுக்கு, அந்த 80 மாணவர்களின் எதிர்காலமும் அவளின் கையில் இருந்தது, அதற்காக அவள் மிகவும் மெனக்கெட்டாள். இது குறித்து ஈஸ்வர மூர்த்தி பாவப்பட்டாலும் கண்ணகி எதை செய்தாலும் சரியாகதான் இருக்கும் என நம்பினார்.
அப்படியே நாட்கள் சென்று செமஸ்டர் எக்ஸாமும் வந்தது.
பரிட்சைக்கு மாணவர்கள் அனைவரும் தயாரானார்கள் கல்லூரிக்குள் வந்தவர்களை வரிசையாக நிப்பாட்டினாள் கண்ணகி