(Reading time: 8 - 15 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

“அவன் இன்னமும் சின்ன குழந்தையே தான்... இப்போ தான் எந்த நாட்டில் இருந்தாலும் கம்ப்யூட்டரில, மொபைல்ல பார்த்து பேசலாமே... வாரம் இரண்டு நாள் அப்படி பேசுறது... மத்தபடியும் தினமும் ஃபோன் செய்து பேசுவான்...”

  

“சின்ன வயசிலேயே அவன் அப்படி தானே ராஜம்? உன்னை விட்டுட்டு எப்படி தான் இருக்கானோ?”

  

“எனக்கும் முதலில் அந்த கவலை இருந்தது. ஆனால், நானே மனசை தேத்திக்கிட்டேன்... இப்போதே இப்படி அவன் கொஞ்சம் தனியா இருந்து பழகிக்குறதும் நல்லதுக்கு தானே? நாளைக்கு அவனுக்கு கல்யாணம் ஆன பிறகு பிரச்சனை இல்லாமல் இருக்கும்...”

  

“உன்னை போல ஒரு தங்கமான மாமியார் இருக்கும் போது என்ன பிரச்சனை வர போகுது? வர போற மருமகளுக்காக உன்னைத் தவிர வேற யாரு இவ்வளவு யோசிப்பா?”

  

“அதென்னவோ தெரியலை அக்கா, ஆனால் கொஞ்சம் பயமா தான் இருக்கு... ஒரு நல்ல பொண்ணா, குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா அவனுக்கு அமைஞ்சா நல்லா இருக்கும்...”

  

“அதெல்லாம் நீ கவலைப்படாதே, எல்லாம் நல்லபடியா நடக்கும்... உன் நல்ல மனசுக்கு நல்ல மருமகள் கிடைப்பாள்...”

  

“ம்ம்ம்... நீங்க சொல்றதுப் போலவே நடந்தால் சரி தான்! ஆமாம் ராதிகா எப்படி இருக்கா?” என வைஜெயந்தியின் மகளை பற்றி விசாரித்தாள் ராஜம்.

  

“நல்லா இருக்கா... அவ குடும்பத்தில் எல்லோரும் நல்ல மாதிரி... உனக்கும் தெரியுமே?”

  

“ஆமாம்... கிருஷ்ணன் குடும்பத்தில் எல்லோருமே ரொம்ப நல்லவங்க தான்...”

  

“...”

  

“குணாளன் எப்படி படிக்குறான்? மதுரையிலேயே இருக்கான்னு தான் பேரு, இந்த பக்கமே

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.