தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 02 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
நியூயார்க் நகரில் அலைமோதும் டிராஃபிக்கில், வெளியே வேடிக்கைப் பார்த்தப்படி தன் நிஸான் அல்டிமாவை லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்தான் விக்ராந்த். அவனின் மனதில் மகிழ்ச்சி அலை மோதிக் கொண்டிருந்தது.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்தியா செல்லப் போகிறான்... பெற்றோரை, தங்கையை நேரில் பார்க்க போகிறான்...
அந்த மகிழ்ச்சிக்கு இடையே, அமெரிக்காவின் சுகவாசத்தையும், டாலர் சம்பளத்தையும் இழக்க போகிறோம் என்ற கவலையும் மனதின் ஒரு ஓரத்தில் இருக்க தான் செய்தது...
முப்பது வயதான விக்ராந்த் பார்ப்பதற்கு மீசை இல்லாத “பூவெல்லாம் உன் வாசம்” அஜீத்தை நினைவுப் படுத்தினான்... இந்தியர்களுக்கே உரிய கம்பீரமான மாநிறத்தில், உயரமாக, மிடுக்குடன் தோற்றம் அளித்தான்.
வேலையில் மிகவும் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்திருந்தவன், பல நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு ஐ.டி நிறுவனத்தில் தற்போது ப்ராஜெக்ட் மேனேஜராக பணி புரிகிறான்...
விக்ராந்தின் அப்பா கணபதி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். பள்ளிக்கூடத்தை போலவே வீட்டிலும் மிகவும் கண்டிப்பானவர்... ஆனால் அம்மா ராஜமின் செல்லப்பிள்ளையான விக்ராந்த், எப்போதும் அம்மாவின் துணையுடன் ஏதேனும் தவறை செய்தாலும் கூட தப்பித்துக் கொள்வான். வேலையில் இருந்து ஒய்வுப் பெற்ற பின் கணபதி, மனைவி மற்றும் மகளுடன் சொந்த ஊரான மதுரைக்கே சென்றிருந்தார்.
அம்மாவின் சமையல் சாப்பிட்டே எத்தனை ஆண்டுகளாகி விட்டது? ராஜமின் சமையல் பற்றி நினைக்கும் போதே விக்ராந்திற்கு நா ஊறியது... ஒரு மாதமாவது லீவ் எடுத்து மதுரையில் டேரா போட வேண்டும்!
சென்னை சென்ற பின், அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் பப்பில் அடிக்கும் லூட்டியை எல்லாம் தொடர முடியாது! தற்போது மதுரையில் இருந்தாலும் கணபதிக்கு சென்னையிலும் நண்பர்கள் ஏராளம்... யாரேனும் அவனை எக்குதப்பாக பார்த்து