(Reading time: 8 - 15 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

வரதே இல்லை...??” என குறைப் பட்டுக் கொண்டே வைஜெயந்தியின் இளைய மகனை குறித்தும் விசாரித்தாள் ராஜம்.

  

“அவன் நல்லா படிக்குறான் ராஜம்... ப்ரியா அவனை எதேதோ கோர்ஸில சேர்த்து விட்டிருக்கா... இங்கிலீஷ், கம்ப்யூட்டர் இப்படி ஏதேதோ...”

  

“ம்ம்ம்... இந்த காலத்தில் அது எல்லாம் தேவை தான்... ஆமாம் ப்ரியாவுடைய தங்கை எப்படி இருக்கா?”

  

“சத்யாவா? நல்லா இருக்கா... இப்போ அவளுக்கு மூணாவது மாசம்...”

  

“ஓ! அப்படியா? அவ ஃபேமிலி எப்படி?”

  

“அவங்களும் நல்லவங்க தான்... எனக்கு கவலை எல்லாம் ப்ரியாவை நினைச்சு தான்! இன்னும் எத்தனை நாள் அவ இப்படியே இருக்க முடியும்?”

  

“ஏன் இப்படியே இருக்கனும்? இவ்வளவு நாள் தான் அது செய்யனும் இது செய்யனும்னு சாக்கு போக்கு சொல்லிட்டு இருந்தா, இனி மேல் என்ன? அது தான் எல்லோரையும் நல்ல விதமா செட்டில் பண்ணியாச்சே?”

  

“ஏதாவது சொன்னால் கேட்டா தானே ராஜம்! கல்யாணத்தைப் பத்தி பேச்சை எடுத்தாலே அமைதியாகிடுறா! நான் இருக்கும் வரை பரவாயில்லை, எனக்கு அப்புறம், அவளுக்கு யார் இருக்கிறது?”

  

“ச்சேச்சே, இதெல்லாம் என்ன பேச்சு அக்கா? நீங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா அவக் கிட்ட சொல்லுங்க...”

  

“நானும் எப்படி எப்படி எல்லாமோ கேட்டு பார்த்துட்டேன்... ஹுஹும், ஒரு முன்னேற்றமும் இல்லை...”

  

“அப்படி எப்படி கேட்டீங்க? என்னோட பேசாதேன்னு சொன்னீங்களா? என்னை உயிரோடு

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.