மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 48 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“சத்யா, அஹல்யாவை இங்கே வர சொல்லேன். நான் சில கேள்விகள் கேட்கனும்!” மதிய உணவை சாப்பிட்டு முடித்து கை கழுவியப் படியே மனைவியிடம் சொன்னான் தென்றல்வாணன்.
“சாரி இன்ஸ்பெக்டர் சார். என் வீடு போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. அப்படி எல்லாம் நீங்க கேள்வி கேட்க முடியாது,” என்றாள் சத்யா கெத்தாக!
“அப்பா, இது அம்மா வீடு மட்டும் இல்லை உங்க இரண்டு பேர் பேருலேயும் இருக்கு. நான் போய் மிஸ்ஸை கூப்பிடுறேன்!” ஷாலினி பக்கத்து போர்ஷனுக்கு ஓடிச் சென்றாள்.
“இது உனக்கு தேவையா சத்யா?” தேன் முகத்தில் சிறு புன்னகை வந்திருந்தது.
“ஒன்னு புரியுது! உடனே வீடை முழுக்க என் பேருக்கு மாத்தி எழுதனும். டாகுமென்ட் எல்லாம் ரெடி செய்துட்டு சொல்றேன். சைன் போட்டுக் கொடுங்க,” என்றாள் சத்யா!
“அப்பா, மிஸ் வந்திருக்காங்க!” ஷாலினி அஹல்யாவையும் அருணையும் கையோடு அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.
“தேங்க்ஸ் ஷாலினி. நீ போய் அருணோட வீடியோ கேம்ஸ் விளையாடு போ!” சத்யா குழந்தைகள் இருவரையும் அங்கே இருந்து அனுப்ப முனைந்தாள்!
அருண் துள்ளிக் குதிக்காத குறையாக மகிழ்ச்சி பொங்க ஷாலினியுடன் சென்றான்.
“உட்காருங்க அஹல்யா. ஒரு விஷயம் தெரிஞ்சுக்க கூப்பிட்டேன். நீங்க அன்ஈஸியா ஃபீல் செய்யக் கூடாதுன்னு சத்யா முன்னாடி பேசலாம்னு யோசிச்சேன்,” என்றான் தேன்!
“சொல்லுங்க இன்ஸ்பெக்டர் சார்,” என்றாள் அஹல்யா!
“நீங்க முன்னாடி தங்கி இருந்த வீடு யார் பேருல இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?”