ஜாயின் செய்ய போறேன்!”
கணபதி மட்டும் அல்லாமல் வர்ஷா, ராஜமும் கூட அவனை கேள்வியாக பார்த்தார்கள்!
விக்கிராந்த் அவனாகவே எந்த விளக்கமும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், கணபதி அவனிடம் விசாரித்தார்!
“ஏன் விக்கி அப்படி அவசரம்? ஒரு மாசம் தங்க போறேன்னு சொன்னீயே? அதுக்குள்ளே உன் அம்மா சமையல் உனக்கு போர் அடிச்சிடுச்சா என்ன?”
“அப்படி எல்லாம் இல்லை அப்பா...” விக்ராந்த் கணபதியிடம் சொல்லி விட்டு, தயக்கத்துடன் அம்மாவை பார்த்தான்.
இதை கவனித்த வர்ஷாவிற்கு உடனடியாக விஷயம் புரிந்துப் போனது!
“அம்மா, எல்லாம் உங்களால வந்தது தான்... அண்ணா எத்தனை சந்தோஷமா வந்தான்.. அவன் கிட்ட தேவையே இல்லாமல் அந்த ப்ரியா பத்தி பேச்சை எடுத்து குழப்பி விட்டுட்டீங்க! நான் கேட்கிறேன், நம்ம விக்கிக்கு வேற பொண்ணா கிடைக்காது? அப்படி என்ன அந்த ப்ரியா கிட்ட ஸ்பெஷல்?”
படபட என பொரிந்த வர்ஷாவை நேராக பார்த்த ராஜம், நிதானமாக பதில் சொன்னாள்.
“ஸ்பெஷலா எதுவும் இல்லை தான் வர்ஷா... வீட்டுக்கு வர மருமகள் பொறுப்பானவளா இருக்கனும், பொறுமை, அன்பு உள்ளவளா இருக்கனும்... பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவளா இருக்கனும்... பார்க்கவும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கனும்... படிச்சிருக்கனும், பண்போட இருக்கனும்...”
ராஜம் அடுக்கி கொண்டே போகவும் வர்ஷா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அம்மாவைப் பார்த்தாள்!
“நானும் ப்ரியாவை இதுவரைக்கும் நேருல பார்த்ததில்லை தான்! ஆனால், கேள்விப்பட்ட