இறங்கினார். மங்களம் வேங்கையனையும் மஹதியையும் பார்த்து
”அட என்ன வெளிய நின்னுக்கிட்டு அதான் எல்லாம் பேசி முடிச்சாச்சே, வாங்க ரெண்டு பேரும் வாங்க” என அழைக்க மஹதி உடனே மங்களத்திடம் சென்றுவிட வேங்கையன் மட்டும் முறுக்கிக் கொண்டு நின்றான். அவரோ
”ஓ வரமாட்டியா சரிடா வராத, அங்கயே நின்னு காவல் காத்துக்கிட்டு இரு” என சொல்லிவிட்டு மற்றவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.
நடப்பது கண்டு மூர்த்திக்கு வெறுப்பே வந்தது, அவனது அனைத்து முயற்சிகளும் படு தோல்வி அடைந்ததை எண்ணி வருந்தினான், ஆனால் ஜானகியோ சிரித்த முகத்துடன்
”மாமா” என அழைக்க இருந்த வேதனையில் அவளை அடித்தேவிட்டான். அப்படி அடிவாங்கியும் அவள் அழாமல் சிரித்தாள்.
”அடி மாமா உனக்கு உரிமையிருக்கு”
”அய்யோ சே” என புலம்பிக் கொண்டே கிளம்பிச் செல்ல முயன்றவனை பிடித்தான் வேங்கையன்
”எங்கடா போற”
”என் வீட்டுக்குப் போறேன்”
”ஏன்டா நீ பாட்டுக்கு ஊருக்கு போயிட்ட உங்கப்பா அம்மா சிவகங்கை போயிட்டாங்க பாவம் ஜானகி தனியா தெருவில இருந்தா அவளை இப்படித்தான் நடத்தறதா“
”அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவள் வேணாம்னு நினைச்சிதானே அவளை விட்டுப் போனோம், சனியன் என்னை விடமாட்டேங்குது”
”டேய் அவளை சனியன்னு சொன்ன கைகாலை உடைச்சிடுவேன், உன்னையே நினைச்சி