”அறிவுகெட்டத்தனமா பேசாதடா நான் உன் வாழ்க்கையை பத்தி பேசறேன் நீ என்னடான்னா இப்படி பேசற”
”ஏம்மா என் வாழ்க்கையை பத்தி பேசறியே, பாவம் அந்த பொண்ணு வாழ்க்கையை பத்தி யோசிச்சியா, அவளுக்கென்ன தலையெழுத்து ஏற்கனவே கல்யாணம் ஆனவனோட கல்யாணம் செய்துக்கனும்னு, அவள்தான் புரியாம பேசறாள்னா நீயுமா, இதே உனக்கு ஒரு பொண்ணு இருந்து அவள் இதுபோல நடந்துக்கிட்டு இருந்தா என்ன செய்வ“
”அப்படி ஒண்ணு நடந்தா நான் சந்தோஷமா என் பொண்ணு ஆசைப்பட்டவனோட நான் கல்யாணம் செய்து வைச்சிருப்பேன் போதுமாடா” என கத்த அதை அவன் எதிர்ப்பார்க்கவில்லை
”அம்மா என்னம்மா பேசற, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சிம்மா நான் எப்படி இன்னொரு பொண்ணை தப்பும்மா, பாவம்மா அந்த பொண்ணு விவரம் தெரியாம ஏதோ யோசிச்சி, தப்பு பண்றா நீ செய்றது தப்புன்னு புத்திமதி சொல்லி அவளை அனுப்பிவிடாம நீயும் அவளைப் போல பிடிவாதமா இருந்தா எப்படிம்மா”
”அவள் உன்னை விரும்பறாடா எனக்கும் அவளை பிடிச்சிருக்கு, எனக்காக அவளை கல்யாணம் செய்துக்க”
”முட்டாளாமா நீ உனக்காக இல்லை, யாருக்காகவும் நான் அவளை கல்யாணம் செய்துக்க மாட்டேன்“
”ஏன் அவளுக்கென்ன குறைச்சல்”
”இன்னுமா உனக்குப் புரியலை ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்க என்னால முடியாது, அவளுக்கு என்னை பிடிச்சிருக்கலாம் விரும்பியிருக்கலாம், ஆனா நான் அவளை விரும்பலையே, பிடிக்காத பொண்ணோட எப்படிம்மா சேர்ந்து வாழறது, அது நரகம்மா, அந்த நரக வாழ்க்கையை நான் ஏற்கனவே ஜானகி விசயத்தில அனுபவிச்சிட்டேன், ஜானகியை