கண்ணகி, அதில் மாதவி நின்றாள் கோவலனும் நின்றான் என்னவென பார்த்தான் கண்ணகியோ
”உங்க தாத்தாவுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நீங்க மட்டும்தான் செய்யனும், பெண்கள் அங்க வரக்கூடாது” என அழுத்தமாகச் சொல்ல அதில் அவனும் சரியென தலையாட்டி மாதவியின் கரத்தை விட்டு விலக அந்த நொடி மாதவி அழுதபடியே கண்ணகியை கட்டியணைத்துக் கொண்டு
”என்னை காப்பாத்து” என்றாள் அவளின் காதோரம், அதைக்கேட்டதும் கண்ணகி ஓரளவு புரிந்துக் கொண்டாள். அவளுக்குத் தெரியாதா தன் தோழி பற்றி உடனே அவளை அவ்விடம் இருந்து வீட்டில் அவளுக்கென ஒதுக்கிய அறையில் சென்று விட்டாள்
”கண்ணகி கண்ணகி” என ஏதோ பேச வர கண்ணகி தடுத்தாள்
”மாதவி நான் உன்னை நம்பறேன், உன் மேல தப்பில்லை நீ இங்கயே இரு வெளிய வரவேணாம்”
”தயவு செஞ்சி கோவலனை என்கிட்ட நெருங்க விடாத ப்ளீஸ்” என கைகூப்பி கெஞ்ச அவளோ வியந்தாள்
”அவர் உன்னை காதலிக்கறாரு இது உண்மையா”
”அப்படித்தான் அவர் சொன்னாரு”
”எப்போ“
“நேத்து நைட்”
”அவர் அங்க வந்ததும் நீ ஏன் எனக்கு தகவல் சொல்லலை”
”அந்த நேரம் நான் சொன்னா கண்டிப்பா அது தப்பாயிடும், என்னை அப்படி இப்படி கூட