அழைத்துச் சென்று கதவை தாள்பாள் போட்டுவிட்டு வந்தாள்
”எதுக்குடி இப்படி செய்ற, முதல்ல நாம கோவலனை போய் பார்க்கனும் வா“
”அதுக்கு முன்னாடி நீ சில உண்மைகளை தெரிஞ்சிக்கனும்”
”என்ன உண்மை”
”சொல்றேன் இங்கிருந்து நான் கிளம்பி நேரா ஊட்டிக்குதான் போனேன், அங்கிருக்கற ஒரு கான்வென்ட்ல டீச்சரா வேலை பார்த்துக்கிட்டு ஹாஸ்டல்ல தங்கியிருந்தேன், கொஞ்ச நாள் முன்னாடி கான்வென்ட்ல டூர் ப்ளான் பண்ணாங்க அதுக்கு நான் மாணவர்களுக்கு துணையா போனேன், டூர் போன இடத்தில அந்த சிலம்புவை பார்த்தேன்”
”என்னடி சொல்ற அவனையா அவன் ஏன் அங்க வந்தான்”
”அவனும் டூருக்கு வந்தான் போல, என்னைப் பார்த்துட்டு வம்பு பண்ண ஆரம்பிச்சான், ஏதோ நான் ஸ்கூல் பசங்களோட வந்ததால கூட இருந்தவங்க அவனை விரட்டிட்டாங்க”
”அப்புறம்“
”அப்புறம் அவன் என்னை தேடி வந்து தொல்லை பண்ணான், எவ்வளவோ திட்டி பார்த்தும் அடங்கலை“
”எதுக்கு அவன் உன்கிட்ட முறைகேடா நடந்துக்கறான் காரணம் என்ன”
”கோவலன் என்னை விரும்பறான்ல எப்படியாவது என்னை டார்ச்சர் பண்ணி கோவலனை ப்ளாக் மெயில் பண்ணி பணம் பறிக்கனும்னு நினைச்சான் போல, நான் இடம் கொடுக்கலை கடைசியா ஒரு நாள் ராத்திரி நேரம் அவசர நிமித்தமா நான் ஹாஸ்டல் விட்டு தனியா கடைக்கு போக வேண்டிய நிலைமை, அப்ப பார்த்து நான் கோவலனை பார்த்தேன், அவரும் சிலம்புவும் கோபமாக பேசிக்கிட்டு இருந்தாங்க, கைகலப்பு வர்ற அளவுக்கு சண்டை போட்டாங்க, அதுல சிலம்பு என்னைப் பார்த்துட்டான், நேரா என்கிட்ட வந்து என்னை