வேலையா உங்கம்மா ஏதாவது உயில் எழுதி வைச்சிருக்காங்களான்னு பார்க்கனும்”
”உயிலை எங்கன்னு போய் தேடுவீங்க”
”இந்த வீட்லதான் எங்கயாவது இருக்கும் தேடிக் கண்டுபிடிக்கிறேன், நீயும் தேடு அதுல எந்த வில்லங்கமும் இருக்க கூடாது, அப்படியிருந்தது மொத்த சொத்தையும் நம்மால ஆளமுடியாது அடைய முடியாது புரியுதா”
”புரியுதுங்க” என அவர்கள் ரகசியமாக பேசுவதை கவனித்த நாச்சியாவோ
”உயில் விசயத்தை பத்தி அப்புறமா பேசிக்கலாம் ரொம்ப பசிக்குது சாப்பிடலாமா” என அழைக்க அவர்களுக்கு திக்கென்றது
”என்னது இது நாம பேசினது அவளுக்கு எப்படி தெரிஞ்சது” என கலாவதி தன் கணவரிடம் கேட்க அவனோ மிரண்டபடி
”இவள் சகலகலா வில்லியா இருக்காளே, இவள்கிட்ட நாம ஜாக்கிரதையா இருக்கனும், எது எப்படியோ உனக்கு இங்க சாப்பிட உரிமையிருக்குன்னு சொன்னாளே, அந்த உரிமையை நாம காப்பாத்திக்கலாம் பேசாம உட்கார்ந்து சாப்பிடலாம் வா“
”என்னங்க நீங்க இப்படி பேசறீங்க நாம எப்படி அவங்களோட சே”
”அப்படி பேசாத கலாவதி, உங்கப்பாவை பார்த்தல்ல நாச்சியா போட்ட போடுல பதில் பேச முடியாம நைஸா ஓடிட்டாரு, ஏதோ ஒரு உண்மையை தெரிஞ்சி வைச்சிக்கிட்டுதான் நாச்சியா இங்க வந்து இவங்களை பொம்மலாட்டம் பொம்மை போல ஆட்டி வைக்கறா, ஏதோ நம்மளை விட்டாளேன்னு சந்தோஷப்படு, தேவையில்லாம இவளை பகைச்சிக்காத, அப்புறம் உள்ளதும் போச்சிடான்னு புலம்ப வேண்டி, வரும் பேசாம அவள் போக்கில போற மாதிரியே போவோம் வா சாப்பிடலாம்” என சொல்ல கலாவதியும் வேறுவழியில்லாமல் இருக்கையில் அமர அங்கமுத்துவோ