“அவளை பார்த்து, என்ன ஒரு பயம் உனக்கு... இந்த ஆல் இன் ஆல் விஜய் பார்த்து என்னைக்காவது இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்திருக்கீயா? அந்த ஒல்லிக் குச்சி பொண்ணை நினைச்சு இப்படி பயப்படுற???”
கீதாவின் உதட்டில் பெரிய புன்னகை உதயமானது!
“பயம் தாங்க... ஆனால் என்னைப் பத்தி நான் கவலை படலை, என் கவலை எல்லாம் உங்களை பத்தி தான்... பழைய கிருத்திகா ஃபார்முக்கு வந்தா, உங்க உடம்புல ஒரு எலும்பாவது மிஞ்சும்???? கஷ்டம் தான்...!”
“அடிப்பாவி, இதை இவ்வளவு சந்தோஷமா சொல்றீயே, நீ ரொம்ப நல்லவ!!!”
“பின்னே கெட்டவளா??? சரி சரி உங்க கிட்ட கதை பேச டைம் இல்லை... எனக்கு நிறைய வேலை இருக்கு...”
“ஆமாமாம்... வீட்டுக்கு போனப்புறம் எனக்கும் கூட நிறைய்யயயயயய வேலையிருக்கு...”
கண்களில் காதல் ரசம் சொட்ட சொன்னவனிடம்,
“உங்களை திருத்தவே முடியாது,” என்று பொய் கோபத்துடன் ஆனால் புன்னகையுடன் சொல்லி விட்டு சென்றாள் கீதா...
🌼🌸❀✿🌷
தியாகு அந்த உணவு மேஜையின் ஒருப்புறம் அமர்ந்திருந்தான்...
கிருத்திகா அதே மேஜையின் மற்றொரு மூலையில் இருந்தாள்...
அவர்களின் திருமண வாழ்க்கையை மறைமுகமாக குறிப்பதுப் போல, இருவரும் ஒவ்வொரு