”அப்படியா நான் பார்க்கலயே” என ரிஷி மறுபடியும் அவளை பார்க்க அதற்கு அர்ஜூன் கோபத்துடன்
”ஆமா நீங்க முகத்தை தவிர வேற என்னத்த பார்த்தீங்க”
”டேய்ய்ய் என்னடா சொல்ற” என கத்த
”அய்யோ இல்லண்ணா, அவள் பக்கத்தில இருக்கிற லக்கேஜை பாருங்க உங்க சொந்தக்காரங்க யாராவது வந்திருக்காங்களா என்ன”
”சொந்தமா இவ்ளோ அழகான சொந்தக்காரங்க இருக்காங்களா எனக்கு தெரியலயே”
”ஒரு வேளை தூரத்து சொந்தமா”
”தூரம்னா”
”ஆ செங்கல்பட்டு வரைக்கும், ஏன்னா இந்த ஒண்ணுவிட்ட ரெண்டுவிட்ட சொந்தங்கள் அந்த மாதிரி ஏதாவது”
”தெரியலயே சரி வா அவள் கிட்டயே கேட்கலாம் என்ன சொல்றாள்னு பார்க்கலாம்” என கூறி விட்டு அர்ஜூனோடு அவளிடம் சென்றான் ரிஷி.
”நீ யாரு” என அவன் கேட்கவும்
”அத்தான் நான் நந்தினி” என அவள் சொல்லவும் அவன் காதில் அவளின் குரல் இனிமையாக கேட்டது.
அர்ஜூனிற்கு திக்கென்றது உடனே மறுபடியும் ரிஷியை அழைத்துக்கொண்டு தனியாக சென்றான்