இமேஜை விட்டு வெளியே வந்து என் மனைவியா மட்டும் இருக்கனும்."
அவன் சொன்ன நிபந்தனையின் பொருள் அவளுக்கு முழுதாக புரியட்டும் என்பது போல் அவளையே பார்த்த படி அமைதியாக இருந்தான் சஞ்சீவ்.
அவன் எதிர்பார்த்ததுப் போலவே இந்துவின் முகத்தில் கோபத்தின் சாயல் தோன்றியது. நீ என்ன மேல் ஆதிக்கம் செலுத்துவது என்பது போன்ற பார்வையோடு இருந்தவனை பார்த்தவளுக்கு கோபம் இன்னும் அதிகமானது! ஆனால் கஷ்டப்பட்டு தன்னை அமைதிபடுத்தி கொள்ள முயன்ற படி,
"அடுத்தது...." என்றாள் கிட்டத்தட்ட உணர்ச்சி இல்லாத குரலில்.
இந்துவின் மனக் கட்டுபாட்டை எண்ணி அந்த நேரத்திலும் தனக்குள் வியந்தப் படி,
"அடுத்தது... கல்யாணம்ன்னு ஆனப் பிறகு தேவை இல்லாம அம்மா வீட்டுக்கு போறது, பாதி நாள் ஃபோன்ல் பேசுறதுன்னு எல்லாம் கூடாது," என்றான் சஞ்சீவ்!
சஞ்சீவின் நிபந்தனைகள் இரண்டுமே முன்பு காஞ்சனா கீதாவிடம் சொன்னது என்பதை உடனேயே இந்து புரிந்துக் கொண்டாள்.
அவளின் கண்கள் அவளின் நேரெதிரே அமர்ந்திருந்தவனை ஆராய்ந்தது! முகத்தை கல் போல் வைத்துக் கொண்டு அங்கே அமர்ந்திருந்தவன் அவளுக்கு புதியவனாக தோன்றினான். சில நாட்களுக்கு முன் இன்டீரியர் டெகரேஷன் கம்பெனியில் இருந்து வந்திருப்பதாக நினைத்து அவள் அவனிடம் பேசிய போது கண்ணில் சிரிப்புடன் நின்ற சஞ்சீவ், வீணா வீட்டில் இருந்து அவளை காரில் ட்ராப் செய்த போது அவள் பேசவில்லை என்று கோபப்பட்ட ஆனாலும் பண்புடன் ந
{/f90filter}
டந்துக் கொண்ட சஞ்சீவ்...
இந்துவின் மன ஓட்டத்தை தடை செய்வதைப் போல்,
"உன் வாயில இருந்து முத்து உதிரும்னு மணிக்கணக்கா என்னால காத்திருக்க முடியாது.