மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 26 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சக்தி தன் எதிரே அமர்ந்திருப்பவளை கூரிய விழிகளால் அளந்துக் கொண்டே கேள்வி கேட்டாள்! “ஏன் உங்களுக்கு வினாயக் மேல இவ்வளவு வெறுப்பு ஐஸ்வர்யா?”
ஐஸ்வர்யா மறுப்பாக தலையை அசைத்தாள்!
“வெறுப்பா எனக்கா??? அச்சச்சோ, நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. எனக்கு வினாயக் மேல, ப்ரியம்வதா மேல யார் மேலேயும் வெறுப்பு கிடையாது. அன்பும், அக்கறையும் தான் இருக்கு. நமக்கு வேண்டிய ஒருத்தருக்கு உடம்பு சரியில்லைன்னா என்ன செய்வோம்? உடனே டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போவோம் தானே? அதையே தான் வினாயக்குக்கு நான் ரொம்ப நாளா சொல்றேன். நான் சொல்றதைக் கேட்டு முன்னாடியே அவரை சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போயிருந்தா இந்த கொலையே நடந்து இருக்காது. இப்போவும் சொல்றேன், வினாயக் தெரிஞ்சு எதையும் செய்யலை. எதோ காரனத்தால அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கு. அதான் இப்படி எல்லாம் நடந்துக்கிறார்.”
“அப்போ நீங்க வினாயக் தான் கொலையை செய்தார்ன்னு நம்புறீங்களா?”
“என்ன இப்படி சந்தேகமா கேட்குறீங்க? வேற யாரு லூசு மாதிரி ரோபோ வச்சு கொலை செய்வா? வினாயக் ஒரு மெண்டல் கேஸு. அவன் தான் செய்திருக்கனும்.”
“ஆனா போலீஸ் இன்னும் அப்படி தெளிவா ஒரு முடிவுக்கு வரலை. அவங்க இன்னும் அந்த ட்ரோனை தேடிட்டு இருக்காங்க. அதுக் கிடைச்சா தான் வினாயக் குற்றவாளியா இல்லையான்னு உறுதியா சொல்ல முடியும்னு சொன்னாங்க.”
“நம்ம போலீஸ் திறமைல எனக்கு நம்பிக்கை இருக்கு. கட்டாயம் அதை சீக்கிரம் கண்டுப்பிடிச்சு அந்த மென்டலை உள்ளே போட்ருவாங்க.”
“நான் ஒரு கேள்வி கேட்டா தப்பா நினைக்கக் மாட்டீங்களே?”
“என்ன கேட்கப் போறீங்க?”