கல்யாணம் செய்து விட்டு அம்மாவிடம் அவ்வப்போது ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்! இப்போதைக்கு வேறு எதுவும் செய்ய இயலாது!
"சரி சஞ்சீவ்! உங்க கன்டிஷன்ஸ் ரெண்டையும் ஏத்துக்குறேன்!" சொன்ன இந்துவின் குரல் அவளையும் மீறி கரகரத்தது!
🌼🌸❀✿🌷
சஞ்சீவ் அதிர்ந்துப் போனான் என்றால் அது மிகையாகாது!
இந்து சம்மதிப்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை! அவள் சம்மதம் சொன்னது மெல்லிய மகிழ்ச்சியை கொடுத்தாலும், ஏன் சரி என்கிறாள் என்ற கேள்வியும் அவனுள் எழுந்தது!
முகத்தை திருப்பி மீண்டும் இந்துவைப் பார்த்தான்!
அவள் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்!
அவனின் பார்வையை சந்தித்தப் பிறகும் அவள் விழிகளை திருப்பிக் கொள்ளவில்லை!
சஞ்சீவால் இந்துவின் முகத்தில் இருந்து எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை! ‘ஏன்’ என்ற கேள்வி இப்போதும் அவனின் மனதை அரித்தது!
ஏற்கனவே இருக்கும் வருத்தங்கள் போதாதென்று இந்த புதிய குழப்பங்கள் வேறு! எல்லாவ
{/f90filter}
ற்றிருக்கும் காரணம் இந்து தான் என்பதுப் போல இந்து மீது பதிந்திருந்த அவனின் பார்வையின் உஷ்ணம் அதிகமானது!
அதனால் இந்துவை எரித்து விடுவதுப் போல பார்த்தவன்,