“ஓஹோ! அதானே பார்த்தேன்! அண்ணா உளறினானா??”
“தியாகு என்னவோ அவன் தான் பயங்கர ஸ்மார்ட்ன்னு நினைச்சு பிரின்சஸ் பத்தி என் கிட்ட கேட்டுட்டே இருந்தான். நான் அவனை விட சூப்பர் ஸ்மார்ட் ஆச்சே, எனக்கு வேண்டிய விஷயத்தை அவன் கிட்ட போட்டு வாங்கினேன்.”
“என்னது?”
“அவங்க இரண்டுப் பேருக்கும் நடுவே முன்பே அறிமுகம் இருக்கு!”
“எவங்க இரண்டுப் பேர்??”
“வேற யார் தியாகுவும், பிரின்சஸும் தான்!”
“ஓ! அப்படியா?”
“ஆமாம்! நம்ம கல்யாணத்துக்கு தியாகு அப்படி சொடக்கு போடுறதுக்குள்ள வேலை செய்ததை பார்த்து என் நண்பனுக்கு என் மேல என்ன பாசம்ன்னு நினைச்சேன். இப்போ தான் அதுக்கு பின்னாடி வேற விஷயம் இருக்குறது தெரிஞ்சது.”
“அப்படி என்ன விஷயம்?”
ஆர்வத்துடன் கேட்டவளை குறும்பு மின்ன பார்த்தவன்,
“இந்த விஜய்க்கு நீ லஞ்சம் தராமல் அவன் எதாவது, சொன்னதா, செஞ்சதா சரித்திரம் இருக்கா?” என்றான்.
அவனை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு செல்லமாக ஒரு அடி கொடுத்தவள்,