மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 27 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“இன்னைக்கே அந்த ட்ரோன் தேடி இருந்திருக்கலாம் சக்தி. எதுக்கு நாளைக்கு போகலாம்னு சொன்ன?” சக்தி ஜீப்பை கிளப்பிய உடனேயே மனதில் இருந்த கேள்வியைக் கேட்டாள் சத்யா.
“ட்ரோனை மறைச்சு வச்சிருக்கவங்க நாம தேடப் போற இடத்துல அதை கொண்டு போய் வைக்க டைம் கொடுக்கனும்ல சத்யா பாஸ்!” சக்தி அதிசயத்திலும் அதிசயமாக குறும்பு மின்ன பதில் சொன்னாள்.
“என்ன?” சத்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
“இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் எதாவது விஷயத்தை ஈஸியா விடுவாரா பாஸ்? அவரு திருவிழா நடந்த இடத்துக்கு பக்கத்துல இருந்த காடு தொடங்கி இங்கே இருக்க எஸ்டேட் வரைக்கும் ஆளுங்கள வச்சு மட்டுமில்லை, தெர்மல் இமேஜ் டெக்னாலஜி, ஆப்டிகல் செக்ஷனிங்ன்னு ஹெலிகாப்டர் வச்சும் தேடி பார்த்துட்டார். எதுவும் கிடைக்கலை! நாம தேடினா மட்டும் எப்படி கிடைக்கும்? யாராவது நமக்காக வச்சா தான் கிடைக்கும்!”
“புரியலை சக்தி. ஏன் நீ அந்த வீட்டுல இருக்கவங்க தான் ட்ரோன் வச்சிருக்கனும்னு நினைக்குற? வினாயக்கே கூட செய்திருக்கலாம். வேற தர்ட் பெர்சன் யாராவதா கூட இருக்கலாம்?”
“வினாயக் கல்ப்ரிட் இலலை சத்யா. காமன் சென்ஸ் யூஸ் செய்து யோசிச்சுப் பாரேன்! வினாயக் சந்திரமௌலி நடுவே இருக்க பிரச்சனைக்கு பெரிய ஹிஸ்டரி இருக்கு. அது எல்லாமே சென்னையில நடந்தது. அப்போ எல்லாம் கோபப்படாம, சந்திரமௌலியை ஹர்ட் செய்யாம இருந்த வினாயக் இங்கே வந்த உடனே ஷூட் செய்வாரா? வினாயக் இங்கே வந்து எவ்வளவு நாள் ஆச்சு? இதுல வேலை மெனக்கெட்டு சந்திரமௌலியை இங்கே வரச் சொல்லி வேற சாகடிப்பாரா? டஸ்ன்ட் மேக் எனி சென்ஸ்.”
“அப்போ வினாயக் மேல பழி போடுறதுக்காக யாரோ இதை செய்றாங்க. யாரு அது? கலைவாணிக்கு ப்ரியம்வதா வினாயக்கை லவ் செய்றது பிடிக்கலை. ஆனால் அதுக்காக ட்ரோன், கொலைன்னு எல்லாம் போவாங்களா? அதெல்லாம் செய்ற டேலன்ட் அவங்களுக்கு இருக்கா?”