கேஸ் முடியுற வரைக்கும்னு சொன்ன?”
“இந்த கேஸ்ல நான் இன்ஸ்பெக்டர் சாருக்கு மெயின் விட்னஸ் பாஸ். என்ன இருந்தாலும் அவர் போலீஸ்காரர், இப்போதைக்கு என்னை பகைச்சுக்க மாட்டார்.”
“நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்குதாம்!”
“நீ அவரை என்ன வேணா சொல்லுவ! நான் சின்னதா எதையாவது சொன்னா கூட உனக்கு கோபம் வந்திருது. என்ன மாதிரியான லவ் பா இதெல்லாம்? சும்மாவா தேன் வீட்டுல எலி வெளியில புலியா இருக்கார்!”
“வாயை மூடிட்டு வண்டியை ஓட்டினால் உனக்கு இன்னைக்கு தோசை கிடைக்கும். இல்லைனா வீட்டுக்கு போய் பாட்டியோட ராகி கஞ்சி, டாக்டரோட ஹெர்பல் டீன்னு குடிக்க வேண்டியது தான்,” என்றாள் சத்யா.
“இப்படி பயங்கரமா மிரட்டினா என்ன செய்றது? நான் வாயே திறக்க மாட்டேன் பாஸ்!”
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல ஆளு கிட்ட தான் பேசாதேன்னு சொல்லி இருக்கார். புத்திசாலி இன்ஸ்பெக்டர்!”
“ஹேய், நீ நேரா உன் வீட்டுக்கு கிளம்பு. உனக்கு இன்னைக்கு தோசை கிடையாது!”
“சின்ன தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? சாரி பாஸ். உங்களின் தோசையின் அடிமை நான்!”
சக்தி அதை சொன்ன விதத்திற்கு சத்யாவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
❀✿❀✿❀✿