மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 34 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சத்யா ஜீப்பில் இருந்து இறங்கி வினாயக்கும் ப்ரியம்வதாவும் ரகசியமாக பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றாள்.
“சாரி லவ் பர்ட்ஸ்! நடுல நந்தியா வர எனக்கும் ஆசையில்லை. ஆனால் இப்போ நீங்க இரண்டுப் பேரும் வீட்டுக்குள்ளே இருக்குறது முக்கியம். ப்ளீஸ்...“
“எதுக்கு சத்யா மேடம்?” ப்ரியம்வதா புரியாமல் கேட்டாள்.
சத்யா அவளுக்கு பதில் சொல்லாமல் வினாயக்கின் முதுகை நட்புடன் தட்டிக் கொடுத்தாள்.
“குட், சைன்டிஸ்ட் சார். டெஸ்ட் க்ளியர் செய்துட்டீங்க!”
வினாயக் சத்யா சொல்வதன் அர்த்தம் புரிந்தவனாக சிரித்தான்.
“வா ப்ரியூ, நாம போய் உன் அம்மா கிட்ட பேசுவோம்.” வினாயக் ப்ரியம்வதாவின் கையை பிடித்து உள்ளே அழைத்துப் போனான்.
சத்யா மீண்டும் சக்தி அருகே வந்து நின்றாள்.
“ஆல் ரூட் க்ளியர் சக்தி. இனி வெறும் க்ளைமாக்ஸ் தான் பாக்கி!”
சக்தி யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
“என்ன சக்தி யோசிக்குற?”
“நம்ம ப்ளான்ல எங்கேயாவது ஓட்டை இருக்கான்னு யோசிக்குறேன் சத்யா!”
சக்தியும் சத்யாவும் பேசிக் கொண்டிருக்க, வீட்டினுள் சத்தம் கேட்கத் தொடங்கியது.
“நான் சொல்றதைக் கேளுங்க. ராகுல், கேளுங்க...“ வினாயக்கின் சட்டையை பிடித்து இழுத்துக்