தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 48 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஜான்வியும் சரவணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்!
"போன மாசம் ஆர்த்தி, இந்த மாசம் ப்ரியாவா? நீ ரொம்ப நல்லவன்டா," என்றான் சரவணன்!
"ஹேய் சரோ, நம்ம விக்கி பத்தி நீயே இப்படி தப்பா பேசினால் எப்படி? நீ சொல்லு விக்கி, யாரு இந்த ப்ரியா? ஆன்ட்டி சாய்ஸா?" என வினவினாள் ஜான்வி.
"யெஸ் சார்ட் ஆஃப்... உங்களுக்கும் கூட ப்ரியாவை தெரியும்... நாம காஞ்சிபுரம் போனப்போ நம்ம கூட வந்திருந்தாங்க," என்றான் விக்கிராந்த் இப்போதும் கண்கள் மின்ன!
"ஓ! அந்த ப்ரியாவா! ஆனால் விக்கி அவங்க..."
ஜான்வி தயங்க, சரவணன் எந்த தயக்கமும் இல்லாமல் போட்டு உடைத்தான்.
"அவங்க விடோன்னு சொன்னாங்களே? அவங்களையா கல்யாணம் செய்துக்க போற? ஏன் விக்கி? உனக்கு யாராவது சிலை வைக்குறேன்னு சொன்னாங்களா? உனக்கு என்னடா குறைச்சல்??"
விக்கிராந்த் பற்களை கடித்தான்! மேஜை மீதிருந்த வாட்டர் பாட்டிலை திறந்து மடமடவென்று தண்ணீரை குடித்தவன், மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,
"சரோ, நீ என் ஃப்ரென்ட்! அந்த ஒரே காரணத்துக்காக தான் என் கோபத்தை உன் கிட்ட காட்டலை! மத்தப்படி இன்னொரு தடவை விளையாட்டுக்கு கூட இப்படி கிண்டலா பேசாதே," என்றான் கண்டிப்பான தோரணையில்.
கடைசி வாக்கியத்தை விக்கிராந்த் பற்களை கடித்தப்படி பேசியதில் தெரிந்த கோபத்தில் சரவணன் நண்பனை நம்ப முடியாமல் பார்த்தான்.
"சரோ, விக்கி சொல்றது சரி! படிச்சவங்க நாமே இப்படி பேசினால் அப்புறம் நாம எல்லாம் படிச்சவங்கன்னு சொல்றதுல என்ன அர்த்தம் இருக்கு? சாரி விக்கி! ஆன்ட்டி, அங்கிள் என்ன