(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம், அதில் ஸ்ரீநிதி தனிப்பட்ட ஒருத்தி! ப்ரியா இந்த ஸ்கூலில் வேலை செய்ய தொடங்கிய நாள் முதலே ஸ்ரீநிதி அவளுக்கு பரிச்சயம் ஆனவள் என்றாலும், இந்த அளவிற்கு அதிகமாக ஸ்ரீநிதி ப்ரியாவை கேலி செய்கிறேன் என சீண்டியது இல்லை!

   

ஸ்ரீநிதி இப்படி அதிக உரிமை எடுத்து நடந்துக் கொள்வது ப்ரியாவிற்கு எரிச்சலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், உண்மையை சொல்வதாக இருந்தால் கிண்டல் செய்கிறேன் என்று ஸ்ரீ அவ்வப்போது விக்கிராந்தை பற்றி பேசியது, அதுவும் அவளையும் விக்கிராந்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணைத்துப் பேசியது, வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

   

கல்யாணம் வேண்டாம், அது சரியில்லை என்ற முடிவில் இருந்தாலும், ப்ரியாவின் மனதையும், நினைவுகளையும் விக்கிராந்தே முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தான்!

   

அவனைப் பற்றி ஒரு சில நிமிடங்கள் என்ன, பல பல நாட்கள் கூட ஸ்ரீநிதி மட்டுமல்லாமல் யார் பேசினாலும் கேட்க அவள் தயார் தான்...

   

ஆனால் முகத்தில் மாற்றமே இல்லாமல் அதை எல்லாம் கேட்டப்படி இருப்பது தான் ப்ரியாவிற்கு பெரும் சவாலாக இருந்தது!

   

அதுவும் ஏற்கனவே அவளே மனதில் இருக்கும் விருப்பத்தை மறைத்து கல்யாணம் வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருக்கிறாள்...

   

ப்ரியாவின் யோசனையை கலைப்பதுப் போல, “எனக்கு அந்த பேரு பிடிச்சிருக்கு...” என ஸ்ரீநிதி அவளாகவே பேச்சை தொடர்ந்தாள்.

   

இப்போதும் கோபப்படுவதாக காட்டிக் கொண்டு மனதில் பொங்கிய பூரிப்பை மறைக்க, பக்கத்தில் இருந்த மொபைல் ஃபோனை கையில் எடுத்து நோண்டினாள் ப்ரியா.

   

தானாக அவளின் கவனம் மெசேஜ் பக்கம் செல்ல... காலையிலும், முன் தினம் இரவிலும் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.