“தியாகு, கிருத்திகாக்கு ஞாபகம் வர ஆரம்பிச்சிருச்சுப்பா...”
செவ்வந்தியின் குரல் அவனை சிந்தனையில் இருந்து வெளியே இழுத்து வந்தது...
அவன் பேச வாயை திறந்த நேரம், கிருத்திகாவின் குரல் கணீரென்று ஒலித்தது...
“நான் ராஜோட கொஞ்சம் தனியா பேசனும்...”
மற்றவர்கள் அனைவரும் (எப்போதும் போல) மறுபேச்சு பேசாமல் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியே சென்றார்கள்.
அவர்கள் அனைவரும் சென்றதும், கிருத்திகாவின் அருகே சென்ற தியாகராஜன்,
“ஹொவ் ஆர் யூ பீலிங் நவ்?” என்றான் அமைதியானக் குரலில்!
“இப்படி உட்கார்ந்து கேளுங்க...” என்று சொல்லி பக்கத்தில் இருந்த நாற்காலியை காட்டினாள் கிருத்திகா.
தியாகு அந்த நாற்காலியை இழுத்து அவளின் அருகே போட்டுக் கொண்டு, ஆனால் அவளை உரசாமல் அமரவும்,
“எனக்கென்ன ராஜ் சார்... எல்லோரோட அமோக கவனிப்பில் நல்லா தான் இருக்கேன்... நீங்க சொல்லுங்க,” என்றாள் கிருத்திகா.
“சொல்றதுக்கு என்ன... நீ ஆசைப் பட்டதை கையோட கொண்டே வந்திருக்கேன்... இந்தா...’
தியாகு நீட்டிய பேப்பரை கையில் வாங்காமல் அவனை ஒரு பார்வை பார்த்தாள் கிருத்திகா...
“என்ன ஹீரோ சார், இப்படி மாறிட்டீங்க? ரொம்ப பயந்துட்டீங்க போல இருக்கு!!!”