தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 07 - சசிரேகா
அட்சய திருதியை நாள் வந்தது. காலையிலேயே விரைவாக எழுந்து ரெடியாகிவிட்டாள் பூங்கொடி. பிரியங்காவோ டிவியில் இருக்கும் ஒவ்வொரு சேனலாக மாற்றி விளம்பரங்களை பார்த்தபடி இருந்தாள் சேதுவோ
”ப்ரியா வந்துச்சா”
”இல்லைங்க வந்தா சொல்றேன்” என்றாள் குழந்தைகளும் வெகு ஆர்வமாக இருந்தனர். ஜெயசீலனுக்கும் ராஜலட்சுமிக்கும் ஒருவித சங்கடமாக இருந்தது, பூங்கொடி நடித்த விளம்பரம் எப்படி வந்திருக்குமோ அது நன்றாக இருந்தால் சரி, ஒருவேளை வேறு மாறாக இருந்தால் பெண்ணின் எதிர்காலம் பாழாகுமே என நினைத்து கவலையில் இருக்க அவ்வனைவரையும் கண்ட பூங்கொடிக்கு வியப்பாக இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
்லயும் உன்னோட விளம்பரம் வரலையே”
”வரும் அண்ணி”
”ஆமா ப்ளக்ஸ்லாம் கூட உன் போட்டோ வரும்ல”
”ஆமாம் அண்ணி”
”பார்க்கனும்னு ஆசையா இருக்கு பூங்கொடி”
”வெளிய போறப்ப பாருங்க அண்ணி” என சொல்லும் போதே குழந்தைகளின் சத்தம் அதிகரித்தது
”அதோ அதோ” என கத்த அனைவரும் டிவியை பார்த்தார்கள்.