“என்ன கீதா அக்கா, சொன்னதை விட ரொம்....ப.... சீக்கிரம் வந்துட்டீங்க?” என்றாள் இந்து.
“ச்சே என்ன இந்து நீ, அவங்க புது முதலாளி கண்டுப் பிடிச்சு, புது கடை திறந்து, புது பொருள் வாங்கி, அப்புறமா அதை வாங்கிட்டு வர வேண்டாம்... ஆமாம் தானே அக்கா?” என்றாள் வீணா!
கீதாவை அவர்களிடம் தனியாக மாட்டி விட்டு ராஜீவ் தப்பித்து சென்று விட, சொன்ன பேச்சை கேட்காமல் தாமதப்படுத்தி விட்டு, இப்போது அவளை மட்டும் மாட்டி விட்டுச் சென்ற கணவனை மனதில் செல்லமாக திட்டினாள் கீதா.
“சரி அக்கா, பாவம் ராஜீவ்! ரொம்ப நேரம் காத்திருக்க வைக்காதீங்க... நீங்க போய் கண்டின்யூ செய்ங்க...”
“நீங்க இரண்டு பேரும் அவினாஷையும், சஞ்சீவையும் விட்டுட்டு இங்கே உட்கார்ந்துட்டு என்ன செய்றீங்க, கிளம்புங்க...”
“எங்க விஷயம் எல்லாம் உங்க ரேஞ்சுக்கு கிடையாது... “
மேலும் சில நிமிடங்கள் அதே பாணியில் அரட்டை அடித்து கொண்டிருந்தவர்கள்,
“இன்னுமா நீங்க தூங்கலை? நாளைக்கு சீக்கிரம் கோவிலுக்கு போகனும், போய் படுத்து தூங்குங்க...” என்ற காஞ்சனாவின் குரலில், இரவு வணக்கம் சொல்லி விட்டு, அவரவர் அறை பக்கம் சென்றார்கள்.
🌼🌸❀✿🌷
சஞ்சீவுக்கும் அவளுக்கும் என ஒதுக்
{/f90filter}
கப் பட்டிருந்த அறையினுள் நுழைந்த இந்துவின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.
தூக்கம் வராமல் புரண்டப் படி கட்டிலில் படுத்திருந்த சஞ்சீவ், இந்து அறைக்குள் நுழைந்த