“வீணாக்கு இப்போ சொல்லவா? வேண்டாம், முதல்ல நீங்க இரண்டுப் பேரும் டாக்டர் பார்த்துட்டு வாங்க,” என கேள்வியும் கேட்டு, தானே பதிலும் சொன்னாள் இந்து.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது,
“ஹலோ இந்து,” என்ற பரிச்சயமான குரல் பக்கத்தில் கேட்கவும், திரும்பி பார்த்தாள் இந்து.
அங்கே பிரசாத் அவனின் தங்கை மற்றும் அம்மாவுடன் நின்றிருந்தான்.
அவர்களை பார்த்து நிறைய நாட்கள் ஆகி இருந்ததால், “ஹேய் பிரசாத்! நீங்க எங்கே இங்கே? எப்படி இருக்கீங்க ஆன்ட்டி? ப்ரியா எவ்வளவு நாள் ஆச்சு உன்னை பார்த்து...” என மகிழ்ச்சியுடன் பேசினாள் இந்து.
பிரசாத்தின் அம்மா அஸ்வினி, “அடடா, கொஞ்சம் கேப் விட்டு, மூச்சு விட்டு பேசு! மாப்பிள்ளை என்னோட ஃப்ரென்டோட மகன்...” என்றாள் சிரிப்புடன்.
“ஓ, அப்படியா! கல்யாண பொண்ணு என் ஹஸ்பன்டோட காலேஜ் ஃப்ரென்ட்... வாங்க, இங்கே உட்கார்ந்து பேசுங்க...” என இந்து பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலிகளை காட்டவும், மூவரும் மறுக்காமல் அமர்ந்தார்கள்...
“அப்புறம் இந்து, மேரேஜ் லைஃப் எல்லாம் எப்படி போகுது?” என பேச்சை தொடர்ந்தாள் அஸ்வினி!
இந்துவும் கீதாவும் இருந்த இடத்திற்கு சற்று தள்ளி நின்று கல்லூரி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த சஞ்சீவின் பார்வை, எப்போதும் போல் நொடிக்கொரு முறை இந்து இருக்கும் பக்கம் சென்ற
{/f90filter}
ு வந்துக் கொண்டிருந்தது! அதே போல் இப்போதும் அவள் பக்கம் பார்த்தவன், இந்து அருகில் அமர்ந்து முகத்தில் புன்சிரிப்போடு பேசிக் கொண்டிருந்த பிரசாத்தை பார்த்து முகம் சுளித்தான்.