சிவசங்கரனுக்கு ஊருக்குள் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது, அமைதியானவர், நல்லவர் என பெயர் எடுத்தவர். சம்யுக்தா பள்ளி முடித்து கல்லூரிக்குள் நுழையும் போதே அவளுக்காக திருமண வரன்கள் வீடு தேடி வந்தது, மகளின் படிப்பு முடியட்டும் என ஒத்திவைத்தார்.
அவளின் படிப்பு முடிந்ததும் அவரின் அந்தஸ்துக்கு இணையான மாப்பிள்ளையை தேடினார் அதில் இளங்கோவன் கிடைத்தான். இளங்கோவன் மருத்துவர், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவே வைத்தியம் பார்க்கிறவர், ஊருக்குள் அவருக்கு நல்ல பெயர் உண்டு, அப்பா அம்மா மட்டுமே, பிக்கல் பிடுங்கல் இல்லாத அமைதியான வாழ்க்கை, அங்கு சம்யுக்தா மகாராணி போல வாழ்வாள் என நம்பினார் சிவசங்கரன்
இருவருக்கும் ஜாதக பொருத்தம் நன்றாக உள்ளது ஆனால் இளங்கோவன் மதுரையில் வாழ்கிறவன், அந்த ஒரு குறை மட்டும் இருந்தாலும் இளங்கோவனை அவருக்கு பிடித்திருந்தது, அழகானவன், அமைதியானவன், பண்பாடு நிறைந்தவன், மக்கள் சேவையில் இருப்பவன், இரக்கமுள்ளவன், அதனால் தன் மகளிடம் ஒரு வார்த்தை கூட கேளாமலே திருமணத்தை ஏற்பாடு செய்தார்.
அவளது தாய் சிவரஞ்சனி மட்டும் திருமணத்தை பற்றி மகளிடம் குறைகூற அவளோ
”அப்பா எந்த முடிவெடுத்தாலும் சரியாதான் இருக்கும்மா, ஏன் டென்ஷன் ஆகற கூல்” என்றாள் இயல்பாக
”சரிடி அதுக்காக மாப்பிள்ளை போட்டோ கூடவா நீ பார்க்க மாட்ட”
“கல்யாணத்தன்னிக்கு மாப்பிள்ளையை நேர்லயே பார்த்துக்கிறேன்மா”
”என்னவோ போ சம்யுக்தா, அப்பா மேல இவ்ளோ பாசமா இருக்கே, கண்ணை மூடி அவரை நம்பறியே இதோ போல உன்னை கல்யாணம் செய்துக்கற மாப்பிள்ளை மேலயும் பாசம் வைப்பியா கண்ணை மூடி நம்புவியா“
”அம்மா அப்பாவுக்கு அடுத்துதான் மத்தவங்களை நான் பார்ப்பேன், கல்யாணம் ஆயிட்டா