இன்றும் அப்படி நடந்தவன், அவனின் அறைக்கு செல்லும் கதவை திறக்கும் முன் மீண்டும் ஒரு முறை தூரத்தில் தெரிந்த அந்த அழகிய மலர்களை கண் இமைக்காமல் பார்த்து ரசித்தான்!
ஆனால், ஆஃபிஸ் அறையினுள் நுழைந்த உடனேயே ஆகாஷின் பாடி லேங்குவேஜ் மொத்தமாக மாறி போனது.
தன் கேலன்டரில் அன்று செய்ய வேண்டிய வேலைகள், பங்கு பெற வேண்டிய மீட்டிங்குகள், சந்திக்க வேண்டிய மனிதர்கள் என அனைத்தையும் மேலோட்டமாக பார்த்தவன், இன்டர்காமில் அவனுடைய செகரட்டரி ஐஸ்வர்யாவை அழைத்தான்.
“குட் மார்னிங் பாஸ்!” என ஐஸ்வர்யாவின் குரல் உற்சாகத்துடன் ஒலித்தது!
“குட் மார்னிங் ஐஸ்வர்யா. இன்னைக்கு நான் ஜே.யூ க்ரூப்ஸ் சேர்மன் அஸ்வத்தை மீட் செய்யனும். அவர் ஆஃபிஸ்க்கு ஃபோன் செய்து அப்பாயின்ட்மென்ட் உடனே வாங்குங்க!”
“ஓகே பாஸ்!”
தொடர்ந்து, அவளுக்கு மேலும் சில வேலைகளை சொல்லி விட்டு தன்னுடைய வேலையில் ஆழ்ந்தான் ஆகாஷ்.
அவன் கேட்டுக் கொண்டதை போல ஐஸ்வர்யா அப்பாயின்ட்மென்ட் ஏற்பாடு செய்து தரவும், அஸ்வத்தை சந்திக்க அவருடைய அலுவலகத்திற்கு சென்றான் ஆகாஷ்.
அஸ்வத் ஜே.யூ க்ரூப்ஸ் எனும் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவர். ஆகாஷ் எம்.பி.ஏ படித்து முடித்த உடன் பிரகாஷின் சிபாரிசில் ஒரு வருடம் அஸ்வத்தின் கீழ் வேலை செய்தான்.
அஸ்வத்துடைய கடுமையான உழைப்பு, அறிவுத்திறன், புத்திக் கூர்மை, நேர்மை, சிரத்தை என பல நல்ல குணநலன்களை பார்த்து அதிசயித்து போன ஆகாஷ், அவரையே தன்னுடைய