மேலே என்ன சொல்வது என்று புரியாமல் குழப்பத்துடன் அவனை பார்த்தாள் சினேகா!
அவள் சற்று முன் வீசிய கோபப் பார்வையை விட... இந்த குழப்பம் நிறைந்த பார்வை அவனின் மனதை மயக்குவதாக தான் இருந்தது... ஆகாஷிற்கு பிடிக்கவும் செய்தது...
ஆனால், சினேகா அவனை தவறாக நினைப்பதை உணர்ந்தவன், அதை சரி செய்ய முயன்றான்.
“சாரி சினேகா... ரொம்ப ஓவர் சின்சியரா, நீங்க பாட்டுக்கு நோட்ஸ் எழுதிட்டு இருந்தா, எனக்கு போர் அடிக்குது... அதான் உங்களை டைவர்ட் செய்ய அப்படி பேசினேன்...”
“அப்போ கூட... இது விளையாட்டு மாதிரியான பேச்சு இல்லை சார்...”
உணர்ச்சியற்று ஒலித்த சினேகாவின் குரல் அவனை எதுவோ செய்ய, தானாக அவனின் உதடுகள்,
“சாரி...” என்று முனுமுனுத்தது!
தொடர்ந்த சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவியது....!
ஒருவழியாக அந்த அமைதியை கிழித்துக் கொண்டு சினேகாவின் குரல் ஒலித்தது.
“சாரி ஆகாஷ் சார்... நீங்க ஜாலியா பேசினதுக்கு நான் ரொம்ப சீரியஸா ரியாக்ஷன் கொடுத்திட்டேன்... ஆசிரமத்துல வளர்ந்ததாலேயோ என்னவோ எனக்கு எல்லாமே சீரியஸா தான் தெரியுது... வேலை தான் சார் எனக்கு எல்லாம்...”
அவள் பக்கம் பார்த் ஆகாஷ், “புரியுது சினேகா... தப்பு என் மேல தான்,” என்றான்!
“விடுங்க சார்... கொஞ்சம் கிராசிங் தி லைன் பேச்சுன்னாலும் அதான் ஆல்ரெடி சாரி