அவன் சொன்ன ஜோக்கை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அக்ஷராவை வாஞ்சையுடன் பார்த்தவன்,
“சொல்லு அக்ஷு, என்ன ஆச்சு? ஏன் மூட் அவுட்டா இருந்த? ஆன்ட்டி ஏதாவது சொன்னாங்களா??? அதுக்காக எல்லாம் அப்செட் ஆகுற பொண்ணு இல்லையே நீ,” என்றுக் கேட்டான்.
அக்ஷரா அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்!
அவளின் பார்வையை கவனித்து புன்னகைத்த ஆகாஷ், “நீ வாய் திறந்து சொல்லனும்னு இல்ல அக்ஷு, எனக்கு உன்னை தெரியாதா... நீ சாதாரணமா இருக்க மாதிரி காட்டிக் கிட்டா என்னால கண்டுப் பிடிக்க முடியாதா என்ன??” என்றான்!
ஆகாஷ் பக்கம் மெச்சும் பார்வை ஒன்றைக் கொடுத்த அக்ஷரா, “சூப்பர்டா அஷ்,” என்றாள்!
“அதெல்லாம் வேண்டாம், என்ன விஷயம்னு சொல்லு...”
“எல்லாம் அந்த கணேஷ் பத்தி தான் அஷ்.... அவன்...” என்ற அக்ஷரா, என்ன நினைத்தாளோ, அந்த இடத்தில சடன் ப்ரேக் போட்டு பேச்சை நிறுத்தினாள்!
“கணேஷ்???” என கேட்டுக் கொண்டே நெற்றியை சுருக்கி யோசித்த ஆகாஷ், “ஓ, உன் ஃப்ரென்ட் ராம்போ கணேஷா?? எப்போவும் ராம்போன்னு சொல்வ...???” என்றான் கேள்வியுடன்!
அக்ஷரா ஆகாஷ் கேட்ட கேள்வியில் குழம்பிப் போனவளாக விழித்தாள்! ஏதோ மிக பெரிய முடிவை எடுக்க போகிறவளை போல நெற்றியை தேய்த்துக் கொண்டு யோசித்தாள்.
“என்ன அக்ஷு, இவ்வளவு யோசிக்குற???”
ஆகாஷின் கேள்வியில் யோசனையில் இருந்து வெளியே வந்த அக்ஷரா, அன்று கணேஷ்