✽✽✽
காலை சூரியன் தன் கதிரொளியை மெல்ல பரப்பிக் கொண்டிருந்தான்.
சுட்டெரிக்காத இளம் வெயில் என்பதால் மக்கள் யாரும் அதைப் பற்றி கவலைப் படாமல் தங்களின் வேலைகளை தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள்.
சினேகா தன் வழக்கமான இடத்தில் நின்று எப்போதும் போல இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...
ஆனால் அவளின் மனம் மற்ற நாட்களை போல இயற்கையை ரசிக்காமல் வேறு ஒரு காரணத்திற்காக பரபரத்துக் கொண்டிருந்தது....
ஆகாஷின் வருகைக்காகவும்... அவனின் குட் மார்னிங்கை காதால் கேட்கவும் அவளின் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது...
நேற்று வரை மிகவும் சாதாரணமாக இருந்த விஷயங்கள் எல்லாமே இன்று மாறி வண்ணமயமானதாக சினேகாவிற்கு தெரிந்தது! வேறென்ன எல்லாம் அவளுள் வந்திருந்த காதல் செய்த மாயம் தான்!
ஆகாஷ் அவளுக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் சூரியன் போல தான்... ஆனாலும் அவள் மனசுக்குள் ஆசைப் படக் கூடாதா என்ன???!!!
அவனுக்கு அவள் கண்ணில் படாத சிறிய பட்டாம்பூச்சியாய் இருக்கலாம், ஆனால் அவளுக்கு அவன் சூரியன்...
எங்கே இருந்தாலும் கண்ணில் படும் நாயகன்...
“குட் மார்னிங் சினேகா....”