வேலை செய்வது போல் பாவ்லா செய்துக் கொண்டே சிதம்பரத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கலானான்.
இரவாகிவிட்டது
”சார், நைட்டாயிடுச்சி சார் வீட்ல தேடுவாங்க சார்”
”என்னய்யா இது, எல்லாத்திலயும் தில்லையை பத்தியோ அவனோட அடியாட்கள் பத்தியோ தகவலே இல்லையே”
”வேற போலீஸ் ஸ்டேஷனல் இருக்கும் சார், தில்லை இந்த ஊரையே ஆள நினைச்சவன் அவனைப்பத்தின தகவல்கள் இந்த ஊர்ல இருக்கற எல்லா ஸ்டேஷன்லயும் இருக்கலாம் சார், நம்மகிட்ட இல்லைன்னா அதை தில்லையோ அவனோட ஆளுங்களோ அழிச்சிருப்பாங்க சார்”
”நீ சொல்றதும் சரிதான் வேற ஸ்டேஷன்ல தகவல்கள் கிடைக்கலாம்”
”ஆனா, அதை அந்த போலீஸ் ஸ்டேஷன்காரங்க நமக்கு தருவாங்களா சார்”
”தரனும், தர வைக்கிறேன்”
”கவனம் சார், தில்லைக்கு போலீஸ்ங்க உதவி செய்றாங்க”
”அது அவன் உயிரோட இருந்தவரைக்கும்தான், எப்ப அவன் செத்துட்டதா விசயம் வந்துச்சோ, அப்பவே எல்லாரும் மாறியிருப்பாங்க, எனக்கு உதவி செய்வாங்க, செய்யலைன்னா செய்ய வைப்பேன்”
”அப்ப நாளைக்கு அந்த பொண்ணை இங்க வரவழைக்க வேணாமா சார்”
“வேணாம், நானே அவங்களைத் தேடி அவங்க இருக்கற ஓட்டலுக்குப் போறேன், அவங்க சொல்ற கதையை கேட்டு இந்த ஸ்டேஷன்ல இருக்கறவங்க அவங்களை தப்பா நினைக்கறாங்க, அது எனக்குப் பிடிக்கலை, அவங்க மேல எந்த களங்கமும் இல்லாம