(Reading time: 21 - 42 minutes)

"ரவாலையே கலக்குறிங்க அண்ணி பஞ்ச் எல்லாம் சூப்பர்" என்று சிரித்துக் கொண்டே தன்யா குடுத்த காபியை சுவைத்தவாறு ஹாலிற்கு வந்தாள்.

அங்கு ப்ரிஷன் திவாகரை வெளியில் கூட்டி செல்லுமாறு அடம் பிடித்துக் கொண்டிருக்க. மதுவை கண்டதும் அவளிடம் ஓடி வந்த "நீ சொல்லு மத்து வெளியில போலாம் தான "என்று அவள் கழுத்தை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சி தாஜா செய்தான்.

திவாகரும் " சரி மிது கிளம்பு முதல்ல நம்ம ரெண்டு பெரும் ஒருத்தர சந்திக்க போறோம் அதுக்குள்ள உங்க அண்ணியும் ப்ரிஷனும் ரெடி ஆகட்டும் அப்புறமா எல்லாரும் சேர்ந்து மூவி போலாம்" என்று மர்மமான சிரிப்புடன் சொன்னான்.

குழம்பி போய் மது தன்யாவை பார்க்க அவளும் அதே உணர்ச்சியையே முகத்தில் காட்ட அவளுக்கும் விஷயம் தெரிந்திருக்கவில்லை அப்படி என்ன இந்த அண்ணன் செய்கிறான் என்று மது மொத்தமும் குழம்பி போனாள். இருவரும் கிளம்பி காரில் சென்றனர். மதுவிற்கு வழியெங்கும் குழப்பம் அதற்கும் மேல் ஆர்வமும்  தவிப்புமாக அவளை பார்க்க திவாகருக்கு சிரிப்பாக வந்தது. "இன்னும் கொஞ்ச நேரம் தான் மது அப்புறம் நீ எப்பவும் சந்தோசமாவே தான் இருப்ப" என்று நினைத்துக் கொண்டான்.

"எங்க அண்ணா போறோம், கொஞ்சம் சொல்லேன் எதுக்கு இந்த சஸ்பென்ஸ் எல்லாம்"

"கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ உனக்கே எல்லாம் புரியும்"

"ம்ம்ம் என்னமோ போ" என்று அலுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.அடுத்த இருபது நிமிடத்தில் கார் விமான நிலையத்தை அடைய புரியாமல் திவாகரை பார்த்தாள். அவனோ அவளை கண்டு கொள்ளாமல் "சீக்கிரம் வா மது ஆல்ரெடி டைம் ஆகிடுச்சு" என்று அவசர  படுத்தினான்.

அவளும் இறங்கி அவனுடன் நடக்க, விமானம் அப்போது தான் வந்து தரை இறங்கியது "அப்பாடா கரெக்ட் டைமுக்கு வந்துட்டோம்" என்று கூறி விட்டு

"ஐயையோ கிப்ட் ஒன்னு வாங்குனேன் அவர ரிசீவ் பண்ண அதை கார்லயே மறந்துட்டேன் இங்கயே நில்லு மிது அவரு வந்தா பேசிட்டு இரு ஐஞ்சு நிமிஷத்துல வந்துடறேன், அவருக்கு உன்ன தெரியும்" என்று விட்டு நழுவிக் கொண்டான். 

மதுவிற்குள் ஆயிரம் யோசனைகள், என்ன நடக்கிறது என்று தெரியாமல் பே பே என்று முழித்துக் கொண்டு நின்றாள். பயணிகள் அனைவரும் வர அதில் யாரையாவுது தனக்கு தெரிந்திருக்கிறதா என்று அலசிக் கொண்டிருந்தாள். அடுத்த விமானமுன் வந்து தரை இறங்க அதில் இருந்தும் பயணிகள் வரத் தொடங்கினர். இரண்டாவதாக  வந்த விமானம்  தாமதமாக வந்தது என்ற அறிவிப்பு கேட்கவே அதை கேட்ட திவாகர் "இது தானே நாம் எதிர் பத்து வந்து விமானம் ஐயோ பாவம் மது ரொம்ப நேரம் தனியே விட்டு விட்டேனே" என்று மீண்டும் உள்ளே சென்றான்.

 யாரையும் தெரியாமல் மது திவாகரை பார்க்க செல்லலாம் என்று நினைக்க அதற்குள் திவாகரே வந்து விட

"என்ன அண்ணா யாரையும் காணோம் நீயும் புதிர் போடற ச்சே " என்று சலித்துக் கொண்டாள்.

" இன்னும் டூ மினிட்ஸ் வெயிட் பண்ண மாட்டியா டி அப்பப்பா"

"ம்ம்ம் போ" என்று சிணுங்கியவள் "அம்மு" என்று குரல் கேட்க மின்னல் வேகத்தில் திரும்பினாள்.சிறு தொலைவில் அவளை பார்த்து கை ஆட்டிய படி வந்து கொண்டிருந்தான் அவள் ரகு!

கால்கள் தடுமாற நெஞ்சம் படபடக்க ஒட்டு மொத்த மகிழ்ச்சியையும் முகம் பிரதிபலிக்க அவனை நோக்கி வேகமாக நடந்தாள் மது நடக்க போகும் எதையும் அறியாமல்!!!

காதல் பெருகும்…

Episode # 01

Episode # 03


{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.