(Reading time: 17 - 33 minutes)

 

ந்துவோ அவன் ஒவ்வொரு வாய் ஊட்டுவதற்கும் எல்லோரையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் திரும்ப ஊட்டி விட, நந்து சுற்றிப் பார்க்க, கவின் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் நக்கல் சிரிப்புடன்.

நந்துவிற்கு பொறக்கை ஏறிவிட, சந்துரு கவின் கண்ணில் ஒரு பன்ச் விட்டான்.

அதை பார்த்து எல்லோரும் சிரிக்க, கவினோ ஏதோ பாக்ஸிங்கில் விளையாடி பன்ச் வாங்கியது போல கண்ணை மூடிக் கொண்டு பாவமாக எல்லோரையும் பார்த்தான். எல்லோரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

சந்துரு திரும்ப நந்துவிற்கு ஊட்டி விட முயற்சிக்க அவள் வாங்க மறுத்தாள்.

கவின் திரும்ப சும்மா இருக்காமல் “பாஸ். அங்க ஒரு பெயிண்ட் பாக்ஸ் இருக்கு. நான் வேணும்னா எடுத்துட்டு வரட்டுமா. நீங்க உங்க கையை அதுல விட்டுடுங்க. நந்து உங்களுக்கு ஊட்டி விடும். ஐடியா எப்படி பாஸ்.” எனவும்,

சந்துரு “உன் இன்னொரு கண் ப்ரீயா இருக்கு போல” என்றான்.

“நோ நோ நோ பாஸ். ஒரு கண்ணு இருந்தாவாச்சும் என் ஜெனி பாதரை சமாளிக்கலாம். ரெண்டு கண்ணும் இல்லாம எப்படி பாஸ்” என்றான்.

அருண் சிரித்துக் கொண்டே “அட விடுடா. உனக்கு ரெண்டு கண்ணும் இல்லைன்னா கூட தீப்தி உன்னை ஏத்துக்க ரெடியா இருக்கா” எனவும்,

கவின் முறைக்க அருண் “சரி சரி. விடுடா. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்றான்.

பின்பு எல்லோரும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, கவினுக்கு ஏதோ ஜெனி நியாபகமாகவே இருந்தது. அவளுடன் பேச வேண்டும் போல இருந்தது.

சிறிது நேரம் வேண்டாம் என முடிவெடுத்து ஜோதியில் ஐக்கியமானான். ஆனால் ஓரளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் போனை எடுத்து ஜெனிக்கு கால் செய்தான்.

வேறு குரலில் பேசி ஜெனியை ஏமாற்ற எண்ணி “ஹலோ ஹலோ” என்று வேறு குரலில் பேசினான்.

அங்கிருந்து பதில் வராமல் போகவே, அவள் கண்டுப் பிடித்து விட்டாள் என்று எண்ணி, “ஜெலோ” என்றான்.

அங்கிருந்து “ஹலோ” என்று ஒரு முரட்டுக் குரல் பதில் சொன்னது. 

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 13

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 15

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.