"நானா போட சொன்னேன்?"-என்று கண்ணடித்தாள் ஷைரந்தரி.
"அண்ணா!"-ரேணுகா.
"அதே பதில் தான் தங்கச்சி!"-சிவா.
"சரியா...போச்சு!திருத்தவே முடியாதுப்பா!"-என்று மஹாலட்சுமி சென்றுவிட்டார்.
"ஓ.கே.கோர்ட் இஸ் அட்ஜன்ட்!"-என்று ஷைரந்தரி கூற,
"உன்னை...என்ன பண்றேன் பார்!"-என்று ரேணுகா அவளை துரத்த ஆரம்பித்தாள்.
சிவா,அர்ஜீனிடம்,
"நீயும் துரத்துற ஐடியாவில இருக்கியா?"
"இல்லைண்ணா!"
"தப்பிச்சேன்!"-அங்கு நடந்த வேடிக்கையை தூரத்தில் இருந்து கண்டு களித்து கொண்டிருந்தனர் யுதீஷ்ட்ரனும்,பார்வதியும்.
"இந்தப் பொண்ணு என்ன இப்படி அட்டகாசம் பண்றா?"-யுதீஷ்ட்ரன்.
"உனக்கு ஏன்?"
"ஆமா....எனக்கு ஏன்?நான் சும்மா தான் கேட்டேன்!"
"உனக்கு பிடிச்சி இருக்குல?"
"என்னது?"
"ஷைரந்தரி!"
"..........."
"இனி...அவங்களை அண்ணின்னு கூப்பிடலாமா?"
"வீண் கற்பனை வேணாம்.."
"ஒத்துக்க மாட்ட!"
"பாரு...ஷைரந்தரி பண்றது பிடிச்சிருக்கு ஆனா,அதை வேற எந்த அர்த்தத்திலையும் சொல்ல முடியாது!"
"உன் மனசில என்ன ஓடுதுன்னு எனக்கு தெரியும்!ஷைரந்தரி விஷயத்துல சிவாக்கிட்ட இருந்து எதிர்ப்பு வரும்னு தோணலை!"-அவன்,மனதில் சிந்தித்ததை அவள் உடைத்தது அவனுக்கு ஆச்சரியத்தை தான் தந்தது.
"இல்லைம்மா...எந்த அண்ணனா இருந்தாலும் கோபம் வரும்."
"எப்படி?"
"நானும் ஒரு அண்ணன் தான்!"-என்றான் பார்வதியின் தலையை வருடியவாறு.
"எனக்கே...அந்த கோபம் வருமே!சிவா,ஷைரந்தரி மேல உயிரையே வைத்திருக்கிறான்.அன்னிக்கு,நான் பேசுனது தப்பு தான்.நீ மனசை போட்டு குழப்பிக்காதே!"-என்று அவன் சென்றுவிட்டான். பார்வதிக்கோ,
ஒரு பக்கம் தன் தமையனா?இப்படி உரைத்தது?என்றிருந்தது.இன்னொரு பக்கம்,அவனுக்கு கோபம் வரும் என்றல்லவா கூறினான்?அவள்,மனதின் பாதுக்காப்பு கவசங்களை மூர்க்கத்தனமாக அறுத்து அவள் இருதய ராஜ்ஜியத்தில் வெற்றி வேந்தனாக அமர்ந்தவனை, கரம் பிடிக்கும் கனவு, கனவாகவே போய்விடுமோ?என்று யோசித்தாள். மற்றொரு பக்கமோ,இது வரையில் எதன் மேலும் விருப்பம் கொள்ளாதவன், விரும்பிய ஒன்று ஆகாய தாமரையாகவே சென்றுவிடுமோ?அப்படி நடக்க கூடாது!என்று வேண்டினாள்.
தொடரும்
{kunena_discuss:751}