ஆதி :
செய்தது நன்றோ???...
என்னை அவளிடத்தில் உரைக்கும் வழி
இதுதானென்று அந்நேரத்தில் பட்டுவிட்டது என் நெஞ்சத்தில்…
அதனால் தான் பொட்டும் இட்டேன் உன் நெற்றியிலும்…
என்னவளே… உன் முகமாற்றத்தை நான் அறிந்தேன்…
அது கொண்டது நிறைவோ, மகிழ்வோ…
தனக்கு சொந்தமான ஒன்று தனக்கு கிட்டிய பெருமிதமோ…
சீதை… காத்திருப்பாயா என்று கேட்ட எனக்கு சொன்னாயே ஒரு பதில்…
அந்த புரிதலுக்கு இணை எதுவுமில்லையடி உலகத்தில்…
உன்னை பெற நான் செய்த தவம் தான் என்ன?..
உன் அருகாமை மட்டும் போதுமென்று நான்
எண்ணிடவைத்தவளே..
என் வாழ்க்கையில் இதுவே போதும் என் அன்பே…
சாகரி :
கொடுத்த கண்ணாடிப் பேழைக்கு நீ தந்தது பரிசா??
இல்லை வெகுமதியா?...
இந்த நேசத்தின் மூலம் என்னை நெருங்கிவிட்டாயே…
இதற்காக தான் நான் ஜென்மம் கொண்டேனோ?...
பிறந்ததின் அர்த்தம் இன்று நான் கண்டுகொண்டேன்….
என் இந்த நிமிடம் நான் இறந்தாலும் நிறைவாக கண்மூடி
இறைவனிடம் நன்றி சொல்வேன்…
ஆதி :
நிழல் போல் எதிரிகள் சூழ்ந்திருக்கும்போதும்
உன்னோடு வாழ்வில் ஆண்டாண்டு காலம் வாழத்தானே
நானும் இன்று உயிரோடு வாழ்கிறேன்…
சாகரி :
தோளோ… அது நான் துயில் கொள்ளும் பஞ்சணையோ…
உன் தோள் சேரும் நாள் வெகு தொலைவோ???..
கண்களும் அன்று கலங்கிடும் மன்னவா…
ஆதி :
இரவில் நான் கண்மூடி சாயும் உறக்கநேரத்திலும்
காலை நான் விழி திறந்து பார்க்கும் அதிகாலையிலும்
உன் முகம் என் எதிரில் இருந்தால் போதும்…
இறக்கும் தருவாயிலும் உன் குரல் நான் கேட்டால்
முக்தி அடையும் என் மரணமும்…
சாகரி :
சிரிக்கையிலும் அழுகையிலும் பற்றிக்கொள்ள
உன் கரம் இருந்தால் போதும்…
உன் விரலோடு விரல் சேர்த்து நடக்கும் போது
உன்னை எதிரிகள் சூழந்தாலும், நம்மை எதிர்த்து தாக்கினாலும்…
நாம் வாழ்வோம் மண்ணில் சிறு சேதம் கூட இல்லாது…
நம் இருவரின் ஒருமித்த காதலினால்…
ஆதி :
மங்கையோ… நீ வான தேவதையோ…
என்னவளே நீயே என்னுயிரடி…
சாகரி :
முதன் முதலில் உன்னை பார்த்த நாளே
என்னை நான் உன்னிடத்தில் தொலைத்துவிட்டேன்…
ஆதி :
எனக்குள் நீ நுழைந்த விதம் எப்படி என்று
அறிய முற்பட்டு கேட்டுக்கொள்கிறேன் என்னையே…
சாகரி :
ஆரம்பிக்கும்போது நானான இருக்கும் நான்
முடிக்கும்போது நீயாக மாறுகின்றேனே ஏன்???
இது தான் காதல் தரும் மென் உணர்வா???
என் தந்தையும் தாயும் சேர்த்து உன் உருவில்
நான் காணும் வரம் பெற்றதும் உண்மை தானோ என் தோழனே?..
ஆதி :
எனக்காக நீ காத்திருந்த நாட்களும்
இனி காத்திருக்கப் போகும் நாட்களும்
நகர்ந்து தேய்ந்தாலும் பிரிவொன்று கொள்ளாது
வாழ வேண்டுமடி பெண்ணே… உன்னுடன் நான்…
………….
காதல் தரும் சுகத்தை அந்த காதலர்கள் அன்றி யாரும் அறிந்திட முடியாது நிச்சயமாய்…
ஆதியும் சாகரியும் அந்த சுகத்தை அனுபவித்து நுகர்ந்து மகிழ்ந்தனர் உளமாற…
நாமும் வாழ்த்துவோம்… காலமெல்லாம் காதல் வாழ்க என்று…
இவர்கள் நால்வரின் திருமணம் நடைபெறுமா?... என்ன சிக்கல் இவர்கள் ஒன்று சேர்வதில்… என்ற கேள்வி எழுந்துள்ளதா உங்கள் அனைவரின் மனதிலும்… பொறுத்திருங்கள் விடை தெரிந்திடும்….
ஹ்ம்ம்…. மீண்டும் அடுத்த வார சீதா-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்…
தொடரும்
{kunena_discuss:739}