"தெரிஞ்சிக்கிட்டியா சிவா?ஷைரந்தரி அவதாரத்தை தெரிஞ்சிக்கிட்டியா?"
"............."
"அவளோட சக்தியை தெரிஞ்சிக்கிட்டியா?"
"ஷைரந்தரி மறு பிறவி எடுக்க காரணம்?"
"இந்த உலகத்துல பிறக்கிற எல்லா ஆத்மாவும் அந்த ஆண்டவனோட ஆணையை நிறைவேற்ற பிறந்திருக்கு! முதல்ல வழங்கின சாபத்தை போக்க பிறந்தவளோட வாழ்க்கை,இப்போ வேற விஷயத்தோட பிணைந்திருக்கு!"
"என்ன?"
"கல்பனா....நியாபகம் இருக்கா?ஷைரந்தரி அனுபவிக்க வேண்டிய அத்தனை வேதனையையும் தாங்கி இறந்தாளே!அவ,ஆத்மா பழி வாங்க துடிச்சிட்டு இருக்கு!"
"கல்பனா?"
"ஷைரந்தரியை விட்டுவிடு! அவ ஆதிசக்தி அவதாரம்...சீக்கிரமே மறுபடியும் ஒரு போராட்டம் வரும்.உன்னால, ஷைரந்தரியை காப்பாற்ற முடியாது.எந்த பிரச்சனைக்கும் தீர்வு சொல்ல முடியாது!"
"இப்போ ஷைரந்தரி..."
"தன்னை தானே மறுபடியும் அழிச்சிப்பா!கல்பனா,பழி வாங்குவா!"-சிவாவும், அர்ஜீனும் அதிர்ந்தனர்.
"என்னால ஏத்துக்க முடியாது!"
"நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்!ஷைரந்தரி நிரந்தரமானவ இல்லை!"
"ஷைரந்தரி நிரந்தரமானவ இல்லை தான்.என் அம்மூ நிரந்தரமானவ...எந்த சக்தியும் அவளை நெருங்க விட மாட்டேன்!"
"..........."
"உங்களுக்கு அவ சக்தி அவதாரம்.எனக்கு அவ தங்கச்சி!அவ நிழலை கூட நெருங்குற எந்த விஷயத்தையும் விடமாட்டேன்."
"இது விதி!"
"எனக்கு அவ முக்கியம். அவளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போவேன். எதிர்த்து நிற்கிறது உங்க ஈஸ்வரனா இருந்தாலும், விடமாட்டேன்.என்னை மீறி எதுவும் அவக்கிட்ட போகாது.உங்க உதவிக்கு நன்றி!"-சிவாவின் வார்த்தைகளில் சிலிர்த்து போனார் நீலக்கண்டச்சாரியார்.
இனி,என்ன நடக்க போகிறது?என்பது... பொறுத்து தான் பார்க்க வேண்டும்!!!!!!
தொடரும்
{kunena_discuss:751}