(Reading time: 26 - 51 minutes)

ண்மையிலேயே அந்த ரிகா யாருன்னு உனக்கு தெரியாதாடா?... என்று பெரும் தவிப்புடன் கேட்டவரிடம், திட்டத்தின் முதல் வெற்றிப் பயணத்தில் அடி எடுத்து வைத்ததை மறைத்து, அந்த பொண்ணை தெரியாதா என்ன?... நேற்று கூட ஷன்வியின் வீட்டில் பார்த்தேனே... அந்த பொண்ணு தானே ஆதிக்கு ஹ்ம்ம்..... அதற்குள் அவளை மறப்பேனா என்ன?... என்று சொல்லவும், அனு அவனை முதுகில் ஒன்று போட்டாள்...

ஸ்... ஆ... ஏண்டி பிசாசே.. எதுக்குடி இப்போ அடிச்ச நீ?...

பின்னே... உன்னை கொல்லாமல் வெறும் அடியோட விட்டிருக்கேனே... அதுவரை சந்தோஷப்படு... என்றவள் மேலும் அவனை அடித்தாள்...

உன்னை என்னப் பண்ணுறேன் பாருடி... என்றபடி அவன் அவளை அடிக்க முற்பட, கோதை இடையிட்டு தடுத்தார்...

முகிலா என் கேள்விக்கு பதில் சொல்லு... என்றவரிடம்,

நான் சொல்லிட்டேனே... நீங்க தான் ஆதி எதோ சொன்னான்னு சொன்னீங்க... ஹ்ம்ம்... இந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டானா என்ன?.. சீக்கிரம் சொல்லுங்கம்மா... அத உங்க வாயால கேட்க ஆசையா இருக்கு...

அவனை இமைக்காது பார்த்தவருக்கு ஆதி போட்ட கண்டிஷன் நியாபகம் வந்தது... அவன் தங்கள் இருவரின் காதலைப் பற்றி தானே யாரிடமும் விசாரிக்கக்கூடாதென்று கூறினான்... அவனின் காதலை யாரிடத்திலும் சொல்ல கோதைக்கு அவன் தடைவிதிக்கவில்லையே.. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவன் விசாரிக்கக்கூடாது என்று மட்டும் தானே சொல்லியிருந்தான்... எனவே துணிவோடு கோதை முகிலனிடம் அவருக்கு தெரிந்த உண்மையை சொல்ல தயாரானார்...

என்னம்மா... நான் உங்க பையன் தான்... பாருங்க... நான் அழகா இருக்கேன்னு நீங்க இப்படி பார்த்துட்டே இருந்தா, இந்த அனு பிசாசுக்கு வயிறு எரியும்மா... அதனால என்று அவன் சொல்லும்போதே,

ஏண்டா... இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஒரு மூஞ்சியை வச்சுகிட்டு அழகுன்னு வேற பொய் சொல்லுறீயா?... உனக்கு எவ்வளவு திமிர்டா?... என்று அனு அவனை அடிக்க...

அய்யோ... ஏண்டி இப்படி அடிச்சிட்டே இருக்குற?.. எருமை மாடே... சே.. உனக்கு பொறாமைடி... குரங்கே... என்று திட்டினான் முகிலன்...

அவனின் பதிலில் கோபம் தலைக்கேற சண்டைக்கு தயாரான அனுவை கோதையின் பதில் மௌனிக்க செய்தது...

ஆமா... முகிலா, ஆதி சொன்னான் தான்... அந்த பொண்ணை பிடிக்கலைன்னு இல்ல... ரொம்ப பிடிச்சிருக்குன்னு...

என்னது!!!!!!!!!!!! என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒரு சேர வாயைப் பிளந்தாள் அனு...

வாயை மூடுக்கா... கொசு உள்ளே போயிட போகுது...

டேய்... வானரமே... இரு உன்னை அப்பறமா பேசிக்கிறேன்... என்றவள் தாயிடம், என்னம்மா சொல்லுறீங்க... நிஜமாவா?... எப்படிமா?...... என்று வினா எழுப்பிக்கொண்டிருந்தாள்...

நிஜம் தான் அனு... ஆதி ஒரு பொண்ணை விரும்புறேன்னு இரண்டு வருஷம் முன்னாடியே எங்கிட்ட சொல்லிட்டான்... அந்த பொண்ணு வேற யாருமில்லை இப்போ நாம அவனுக்கு பேசி முடிக்க நினைக்கிறோமே அந்த ரிகா தான்... என்று சொல்லிவிட்டு முகிலனைப் பார்த்தார்...

திட்டத்தின் முதல் அடி வெற்றி கிட்டிய சந்தோஷத்தில் தாயைக் கட்டிக்கொண்டான் முகிலன்...

அம்மா... நான் ஹேப்பிம்மா... இப்போ நான் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுறேன்... என்றவன், ரிகா என் ஆஃபீசில் தான் வேலைப் பார்த்தாள், அவளை எனக்கு நல்லாவே தெரியும், உங்க சின்ன மருமக அதான் என் வருங்கால பொண்டாட்டி மயூரியோட ஆருயிர் தோழியும் இந்த ரிகா தான்... என்று சொன்னதும், அந்த தாயின் முகத்திலும் சிறு புன்னகை கீற்று...

து எதுவுமே புரியாத நிலையில் இருந்தாள் அனு... என்ன சொல்லுறாங்க இரண்டு பேரும்... நாம தான ரிகாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது... ஆனா இவங்க ஆதி-ரிகா லவ் பண்ணினாங்கன்னு சொல்லுறாங்க... முகிலன் என்னடான்னா அவன் ஆஃபீசில் தான் வேலைப் பார்த்தான்னு சொல்லுறான்... மயூரிக்கும் ஃப்ரெண்ட்ன்னு வேற சொல்லுறான்... ஆண்டவா... ஒரே குழப்பமா இருக்கே... அய்யோ... என்றவள் தலையைப் பிய்த்துக்கொள்ள,

போதும் அக்கா... வீணா, உனக்கு இல்லாத மூளையை எல்லாம் இருக்குன்னு நினைச்சு ரொம்ப யோசிக்காத...

டேய்... விடுடா... பாவம்... அவ... என்ற கோதையிடம் சரிம்மா.. உங்களுக்காக விடுறேன்... என்றபடி சிரித்தான்...

கோதை அனுவிடம் தனக்கு தெரிந்த தகவல்களை சொல்ல, அனுவிற்கு ஆச்சரியம் தாளவில்லை... தன் தம்பியா இப்படி காதலித்தான் என்று...

முகிலன்,,, ஆதியும் ரிகாவும் காதலித்தார்கள் என்றும், அதன் பின் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும், அதற்கான காரணம் தெரியவில்லை என்றும், ஆதியைப் பிரிந்து அவள் மும்பை சென்றாள் என்றும், அங்கு நடந்த ஒரு விபத்தில் அவள் தன் நினைவுகளை தொலைத்துவிட்டாள் எனவும், அவளை அப்போது காப்பாற்றி சிகிச்சை அளித்தது ஹரீஷ் தான் என்றும் கூறியவன், இனி ஆதி-ரிகாவை எப்படி சேர்த்து வைக்கப் போகிறோம் என்று கேட்டான் இருவரிடத்திலும்...

சிறிது நேர யோசனைக்குப் பின்னர், அதற்கு ஒரு சில வழிகள் இருக்கிறது ஆனால் எல்லாம் நாம் நினைத்தப்படி நடக்குமா என்பது தான் கேள்விக்குறி... என்றாள் அனு...

ஏன் எதிர்மறையாவே நினைக்குற அக்கா?... எல்லாம் நல்ல.... என்று அவன் உரைக்கும் முன், நல்ல படியாவே நடக்கும்... என்றபடி அங்கு வந்தான் ஹரீஷ்...

வா ஹரீஷ்... நீ சொல்லுற மாதிரி எல்லாம் நல்ல படியா நடந்தா சந்தோஷம் தான்... என்றார் கோதை...

கவலை வேண்டாம்மா இனி என்றவன், நான் போட்ட பிளான் படி உங்ககிட்ட இருந்து தகவல் கிடைச்சிடுச்சு... ஆனா, எனக்கு வேண்டிய சில தகவல்கள் இன்னும் இருக்கேம்மா என்றவன் முகிலனைப் பார்க்க,

அவனோ, என்ன ஏண்டா பார்க்குற?... உனக்கு இப்போ என்ன தெரியணும்... அதை சொல்லு முதலில் என்றான் நேரடியாக...

தெளிவாகவே கேட்குறேன்... முகிலன்-மயூரி கல்யாணத்தில் என்ன பிரச்சினை அம்மா?...

அவன் இதை கேட்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை தான்... எனினும், பேசினால் தானே பிரச்சினை முடியும்... பேசாமலே மூடி மூடி மறைத்தால் யாருக்கு தான் என்ன லாபம்?... என்ற எண்ணத்தில் கோதை அவனிடத்தில் சொல்லிவிட்டார் அனைத்தையும்...

கேட்டவனோ, சத்தியமாய் இப்படி ஒரு பிரச்சினை இருக்கும் என்று கனவிலும் எண்ணிப்பார்க்கவில்லை...

மகனின் திருமணம் தள்ளிப் போகிறதே என்று அழுத கோதையை பிள்ளைகள் மூவரும் சேர்ந்து சமாதானப்படுத்தினர்...

முகில் ::: இதுக்குதான்ம்மா, நான் தலைப்பாடா அடிச்சிகிட்டேன்... இந்த அனு கூட ரொம்ப சேராதீங்கன்னு... கேட்டீங்களா என் பேச்சை?... இப்போ பாருங்க... அவளை மாதிரியே அழுமூஞ்சியா ஆக்கிட்டா உங்களை...

அனு ::: அடிங்க... யாருடா... அழுமூஞ்சி... ?...

ஏன் அதுல உனக்கு சந்தேகம் வேற வருதா?... கன்ஃபார்மா நீ தான்...

டேய்... எருமை மாடே.. ஏண்டா காலையிலே இருந்தே என்ன வம்பிழுக்குற?... உனக்கு வேற யாருமே கிடைக்கலையா?... ஆமா நம்ம கடைக்குட்டி ஈஷ் எங்க?..

ஹாஹா... அவனை கேட்குறீயா?... அவன் நம்ம பிளானோட அடுத்த கட்ட அடி எடுத்து வைக்கப் போயிருக்கான்...

என்னடா லூசு சொல்லுற?... புரியும்படி சொல்லு...

அய்யோ... மக்கு அனு... அதை இப்பவே சொல்லிட்டா ட்விஸ்ட் போயிடும்டி கதையில... அதனால இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு...

ஏண்டா நான் மக்கா?... உன்னை என்னப் பண்ணுறேன் பாரு... என்று அனு முகிலனை துரத்த, கோதை புன்னகை பூத்த வண்ணம் ஹரீஷைப் பார்த்தார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.