சரி ஷ்யாம்… நீங்க சொல்லுறதெல்லாம் சரிதான்… ஆனா, பெரியவங்களிடம் சம்மதம் வாங்கணுமே… அதை எப்படி செய்ய?... என்று அவனின் அருகில் அமர்ந்தபடி கேட்ட மனைவியிடம் இதில் பெரியவர்களுக்கு முழு சம்மதம் என்று அவன் நடந்ததை சொல்ல, அவள் அவனை விட்டு விலகி,
அப்போ எல்லாம் திட்டம் போட்டு பண்ணிட்டு, இங்கே வந்து ஒன்னுமே தெரியாத மாதிரி, நீங்களா சொல்லுற மாதிரி எங்கிட்ட நடிச்சிருக்கீங்கல்ல, உங்களை என்றவள் அவனை தலையணையைக்கொண்டு அடிக்க…
இல்லடா அனு… நானா சொல்லுற மாதிரி சொல்லப்போய் தான் உன் அழகான கண்ணு விரிஞ்சதை இப்படி பக்கத்துல இருந்து பார்க்க முடிஞ்சது… இல்லன்னா என்னால அதை பார்த்திருக்க முடியுமா என்றவன், அவள் அசந்த நேரம் பார்த்து அவளது கையிலிருந்த தலையணையை பிடுங்கி விட, இப்போது அவள் முறைப்பதற்கு பதில் சிரித்தாள்…
கோபமா அனு என் மேல?... என்றவனிடத்தில் உங்க மேல எப்படி எனக்கு கோபம் வரும்… நீங்க என் செல்ல ஷ்யாம்… என்றவள் அவன் மேல் சரிய, அவன் அவளை அள்ளி அணைத்து, அவள் முகம் நோக்கி குனிந்தான்…
அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த அவ்னீஷின் அருகே மெல்ல சென்றவள், ஹ்ம்ம் கும்… என்று சத்தம் கொடுக்க,
ஹேய்… நீ எப்போ உள்ளே வந்தே?... என்றான் அவன்…
அதுசரி... பொண்டாட்டி உள்ளே வந்தது கூட தெரியாம அப்படி என்ன யோசனை பண்ணிட்டிருக்கீங்க சார்?...
அதுவா… என்றவன், நீ வந்ததும், முதலில் உன் கையிலிருந்த பாலை வாங்கி இப்படி ஒரமா என்றவன் அதை வாங்கி அருகிலிருந்த டேபிளின் மேல் வைத்தவன், அவளைப் பார்க்க…
அவள் சொல்லுங்க… என்றாள் கையசைத்து…
அப்புறமா, என்றவன், அவளை சுற்றி வந்து, சட்டென்று அவள் கைப்பிடித்து இழுத்து, கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு, இப்படி உன்னை கைப்பிடிச்சு இழுத்து முத்தம் கொடுக்கலாமா இல்லை… கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன் சவி… என்று சொல்ல… அவள் அவனை விலக்கிவிட்டு, சேலையை இழுத்து சொறுகியவள்,
அங்கே ஒரு ஓரமாக தொங்கிக்கொண்டிருந்த அவனது பெல்ட்டை எடுத்து அவனை விரட்ட ஆரம்பித்தாள்…
அடிப்பாவி… தனியா மாட்டிக்கிட்டேன்னு இப்படி துரத்துறியேடி… இது உனக்கே நியாயமா இருக்கா?... என்று அவன் ஓடிக்கொண்டே கேட்க…
நீங்க தானே காலையில் சொன்னீங்க… தனியா மாட்டுவடி… அப்போ உன்னை பேசிக்கிறேன்னு… அதான்… நானும் உங்க பாஷையில் பேச ஆரம்பிச்சிருக்கேன்… எப்படி இருக்கு என் பேச்சுவார்த்தை என்றவள்… ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு மறு கையில் பெல்ட்டை சுத்தியபடி கேட்க…
கொலைகாரி… ராட்சஸி… இப்படி முதல் நாளே எனக்கு இந்த நிலைமையா?... அது ஏதோ காலையில தெரியாம ஒரு வார்த்தை சொல்லிட்டேன்… அதுக்காடி இப்படி கொலை வெறி பிடிச்சு அடிக்க வருகிற?...
ஆமா.. கொலை வெறி தான்… எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்… என்றவள் நில்லுங்க… ஓடாதீங்க… என்று சொல்லிக்கொண்டே விரட்ட…
அடியே… இதெல்லாம்… இன்னும் இரண்டு நாள் தாண்டி… அப்புறம் மொத்த குடும்பமும் இருக்கும்போது நீ என்னடி செய்வ?... சென்னையில் உன் தில்லாலங்கடி வேலை எல்லாம் செல்லாதுடி என் சவி செல்லம்… என்று சொல்ல…
என்னது… சென்னையா?... என்றவள் ஓடுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்க்க…
அவன் இதுதான் சந்தர்ப்பம் என்றபடி ஆமா, சவி செல்லம்… நாம எல்லாரும், ஒன்னா சென்னையில் இருக்கப் போறோம்… என்றதும்,
வனீஷ்… நிஜமாவா சொல்லுறீங்க… என்றபடி அவனருகில் வர,
ஹ்ம்ம்… ஆமாடா… உண்மைதான்… உங்கிட்ட அதை எப்படி சொல்ல என்று தான் யோசித்துக்கொண்டிருந்தேன்… நீ அதற்குள் வந்துவிட்டாயா… சரி… உன்னுடன் கொஞ்சம் விளையாடலாம் என்றெண்ணி தான் உனக்கு முத்தம் கொடுத்தேன்… நீ வேறு அழகாய் இருந்தாயா… அதான் தடுமாறிவிட்டேன்… அதற்காக இப்படியா என்னை அடிக்க விரட்டுவாய்?... என்று அவன் பாவமாக, சோகமே உருவாக அமர்ந்து அவளிடம் சொல்ல…
அவள் பாகாய் உருகிவிட்டாள்… அய்யோ… என் வனீஷ் செல்லம்… நான் சும்மா உங்களிடம் விளையாட எண்ணி தான் இப்படி நடந்துகொண்டேன்… சாரி வனீஷ்… சாரி… என்று அவன் முன் முட்டி போட்டு மன்னிப்பு கேட்க… அவன் ஹ்ம்ம்… என்று முகம் திருப்பிக்கொண்டான்…
வனீஷ்… சாரி… என்றவளை அவன் கண்டு கொள்ளாது அமர்ந்திருக்க…
அவள் அழ ஆரம்பித்துவிட்டாள்…
அவள் அழுகை சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு அவளைப் பார்த்தவன், சட்டென்று அவளை எழுப்பி, அவள் முகத்தை கைகளில் ஏந்தி, ஹேய்… சவி செல்லம்… நான் சும்மா சொன்னேண்டி… உன்கிட்ட தானே நான் விளையாட முடியும்… என்றவனை அழுதுகொண்டே ஏறிட்டவள்…
ஹ்ம்ம்… சாரி வனீஷ்… என்று சொல்ல… அட பைத்தியம்… இங்கே வா… உங்கிட்ட ஒன்னு சொல்லணும்… என்றவன்,
நான் உன்னை முதன் முதலில் எங்கே பார்த்தேன்னு தெரியுமா என்று கேட்க… அவளுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது, அவன் அதை ஒரு முறை சொல்ல வந்து சொல்லாமல் விட்டது…… பின் தானும் அதை கேட்க நினைத்து மறந்து போனது எல்லாம்…
சொல்லுங்க என்று அவள் விழிகளே எடுத்துக்கொடுக்க, அவன் தொடர்ந்தான்…
அபியை ஒருநாள் ஸ்கூலில் விட வந்தேன்… அவளை அங்கு சேர்த்த புதிதில்… அப்போது தான் காலையில், அவள் லன்ச் பாக்ஸை மறந்து காரிலேயே விட்டு விட்டு போய் விட, அதை கொடுக்க அவளைத் தேடி பள்ளியினுள் நான் வந்தேன்… அந்நேரம் தான் குட்டீஸ் இங்கே பாருங்க… என்ற உன் குரல் கேட்டது… உன் குரல் வந்த திசையை நோக்கி நானும் வர, நீ ஒரு வகுப்பில், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாய்… கையை ஆட்டி, தலையை அசைத்து நீ பேசிய விதம் வெகுவாய் என்னைக் கவர, அங்கேயே நின்று உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தேன்… பின் ப்யூன் வந்து யாரு சார் நீங்க… என்ன வேண்டும் என்று கேட்க, நானும், அபியைப் பற்றி சொன்னேன்… அவன் என்னை அபியிடம் அழைத்துச் சென்றான்… நான் அவளிடம் அதை கொடுத்துவிட்டு நீ இருக்கிறாயா என்று நீ இருந்த அறைக்குள் எட்டிப்பார்த்த படியே வெளியே சென்று விட்டேன்…
அதன் பின் உடனேயே நான் வெளிநாடு செல்ல வேண்டி இருந்தது… அங்கு சென்ற பின்னும், உன் முகம் மட்டும் என் மனதில் பதிந்திருந்தது… நான் சாப்பிடும்போதும் சரி, தூங்கும்போதும் சரி, வேலைப் பார்க்கும்போதும் சரி… எப்போதும் உன் முகம் எனக்குள் வந்து வந்து சென்றது… பல மாதம் கழித்து, வீட்டில் பார்ட்டி என்று அக்கா சொன்னதும், அபியை பள்ளியில் கொண்டு விடும் சாக்கில் உன்னை மீண்டும் பார்த்திட வேண்டும் என்று முடிவெடுத்து இங்கே வந்தேன்… வந்த பின் தான் எனக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி… நீயும் இங்கே பார்ட்டியில் இருந்தாய்… எனக்கு அது வசதியாய் போனது.. உன்னிடம் வந்து பேச்சுக்கொடுத்தேன்… அதன் பின் நடந்தவைகள் தான் உனக்குத் தெரியுமே… சவி… என்று அவன் நிறுத்த…
அவள் ஊமையாகிப்போனவளாக அவனைப் பார்த்திருந்தாள்…
சவி… என்னாச்சுடி… சவி… என்று அவன் அவளை உலுக்க…
அவள் ஐ லவ் யூ வனீஷ்… ஐ லவ் யூ சோ மச் என்றபடி அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள்…
அட மக்கு… ஐ லவ் யூ இப்படியா சொல்லுவாங்க… என்றபடி அவன் கேட்க…
பின்னே வேற எப்படி சொல்லுவாங்க என்ற பாவனையில் அவள் பார்க்க…
அவன் அவளை இழுத்து அணைத்தான்…
வனீஷ்… என்றவள் குரல் தேய,
ஐ லவ் யூ சொல்லவே உனக்குத் தெரியலைடி… இரு இப்போ நான் சொல்லிக்கொடுக்கிறேன் என்றவன், ஐ லவ் யூ இப்படி சொல்லணும் என அவள் கழுத்தில் முகம் புதைத்து அவளை கிறங்க வைத்தான்…
அவள் அவனை இறுக அணைத்துக்கொள்ள, அவன் அவள் உதடுகளில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்து அவளை மேலும் இறுக்கிக்கொண்டான்…