" கடவுளே, அந்த கல்யாண மண்டபத்தை சேருறதுதுக்கு முன்னாடி என்னை கொன்னுடு ப்ளீஸ் " என்று கண்ணீர் மல்க அனைத்து கடவுளையும் வேண்டினாள் .. அவள் எண்ணவோட்டங்களை விட வேகமாய் சீறி பாய்ந்தது மதியழகனின் கார். சில மணி நேரங்களிலே மண்டபத்தை அடைந்திருந்தனர். காரைவிட்டு இறங்க வந்தவளை நிறுத்தியதி மதியின் குரல் ..
" மித்ரா .. நீ என் தங்கச்சி .. உன் வாழ்க்கை மேல எனக்கும் அக்கறை இருக்கு .. ஒரு விஷயம் இப்போ சொல்லன்னும்னு தோணுதுடா .. நமக்கு லைப்ல எது வேணும்னு நினைச்சாலும் அதை அடையறதுக்கு நாம கொஞ்சமாச்சும் முயற்சி பண்ணனும் . ஒருவேளை நமக்கு அது கிடைக்கலன்னாலும் கூட முயற்சி பண்ணினோமேன்னு ஒரு திருப்தி இருக்கும் ..எனக்கு என்னவோ இன்னமும் எதுவும் கை மீறி போகலன்னு தோணுது .. அவசரபாடாமல் பொறுமையா முடிவெடு .. உன் சந்தோசம் இனி உனக்கில்லைன்னு ஆனபோதிலும் மத்தவங்க சந்தோஷத்துக்காக நீ ஏதாவது செய்ய முடிஞ்சா அதை மனசார எற்றுக்கோ.." என்றான் .. அவன் சொல்வதை உள்வாங்கியபடி நடந்தாள் சங்கமித்ரா .. மணமகன் மணமகள் இடத்தில் ஷக்தி மற்றும் வைஷ்ணவியின் பெயர் பொரிக்கபட்டு இருந்தது ..
" வாங்க மேடம் " என்று வாசலிலே நின்று வரவேற்றாள் மீரா .. அவளருகில் உரசிக்கொண்டு நின்றான் கிருஷ்ணன் .. " யோவ் புருஷா சும்மா இரு " என்று அவள் முணுமுணுக்க,அவர்களிடம் பேசும் எண்ணம் கூட இல்லாமல் தலை தெறிக்க உள்ளே ஓடியவளை பார்த்து ரகசியமாய் சிரித்து கொண்டனர் ..
" எப்படி நம்ம அட்வைஸ் பேபி ?" - மதியழகன்
" சகிக்கல மது ..முதலில் ஷக்திக்கு கால் பண்ணு " என்றாள் .. அதற்குள் ஷக்தியே அழைத்திருந்தான் ..
" மதி அண்ணா எங்க இருக்கீங்க ?"
" தம்பி கவலையே வேணாம் .. உன் ஹீரோயின் வந்தாச்சு .. நீ எங்க இருக்க ?" என்றான் மதி ..
" மணமேடையில் தான் "
" அடபாவி .. ஐயர் டென்ஷன் ஆகிட போறாரு நீ மந்திரத்தை சொல்லு " என்றான் மதி ..
" அது இருக்கட்டும் அண்ணா ..எனக்கு உங்களை பார்க்கணுமே .. " என்றான் ஷக்தி ..
" இன்னும் 2 மினிட்ஸ் ல உன் முன்னாடி இருப்பேன் " என்றபடி போனை வைத்தான் மதியழகன். நிலாவுடன் பேசிவிட்டு அந்த மண்டபத்தில் வந்தவனை, உரிமையாய் கைப்பிடித்து கொண்டு சென்றான் அந்த புதியவன் ..
" யாரு மது இது உன் சொந்தமா ?" என்று கிசுகிசுத்தாள் தேன்நிலா ..
" தெரில பேபி .. பட் என்னை மாதிரி இருக்கான் பாரேன் .. அதே ஹைட் , அதே ஸ்மார்ட் "
" ம்ம்ம்கும்ம்ம் உன்னை ஒருத்தன் கடத்திட்டு போறான் அது தெரியாம ரசிக்கிரியா நீ " என்றாள் நிலா .. அவர்களின் பேச்சை கேட்டு களுக்கென சிரித்தாள் அந்த புதியவனின் அருகில் நின்றிருந்த பெண் ..
" அஜ்ஜு போதும் உங்க அதிரடி என்ட்ரி எல்லாம் .. ரெண்டு பேரும் அலறுறாங்க கொஞ்சம் இறங்கி வாங்க " எனவும் மதியழகனின் கைகளை விடுவித்துவிட்டு
" உத்தரவு இளவரசி" என்று இடைவரை குனிந்து சலாம் வைத்து சிரித்தான் , வேற யாரு ? நம்ம அர்ஜுனனே தான் !!
அடுத்த அத்யாயத்தில் சிந்திப்போம் ப்ரண்ட்ஸ் ..
தொடரும்
{kunena_discuss:777}