லண்டன் ..!
இரவு மணி 1 க்கு இந்தியாவில் இருந்து போன் வரவும் பதறியடித்து எழுந்தாள் ஹரிணி .. அவளை எழ விடாமல் தன்னோடு இறுக்கி இரும்பு கரங்களால் சிறைபிடித்து இருந்தான் அவளது அன்பு கணவன் சித்தார்த் ..
" சித்து "
"ம்ம்ம்"
" போன் வருது "
" வந்தா வரட்டும் ..நீ எங்க போற ?"
" விளையாடாதே டா .. இந்தியாவில் இருந்து போன் ..உன் தங்கச்சி தான் கூப்பிடுறா "
" சகியா ?" என்றவன் போர்வையை சுருட்டி கொண்டு எழுந்தான் ..அப்போதுதான் மணியை பார்த்தவன் ,
" அங்க மணி 6 ஆகி இருக்கும் ..அதான் போன் பண்ணி இருக்கா ..இருந்தாலும் இந்த வாலு அவ்வளவு சீக்கிரமா எழ மாட்டாளே " என்றான் ..
" யோவ் , சும்மா என்னையே வறுத்து எடுக்காமல் போனை எடுங்க "
" ஹீ ஹீ ." என்று அசடு வழிந்தபடி போனை எடுத்தான் ..
" ஹெலோ அண்ணா "
" சொல்லுடா ... எப்படி இருக்க ?"
" ம்ம்ம் இருக்கேன்..நீங்க ?"
" எனகென்ன , உங்க அண்ணி என்னை கண் கலங்காம பார்த்துக்குறா "
" ம்ம்ம்ம்"
" என்ன விஷயம் சகி ?"
" அண்ணா நான் அடுத்த வாரமே லண்டன் வரேன் "
" வாவ் சூப்பர் ... ஆனா , நீ அருள்காக வைட் பண்ணி ரெண்டு வாரம் கழிச்சுதான் காலேஜ் ஜாயின் பண்ணுறதா சொன்னியே ? இப்போ எப்படி சீக்கிரமா வரன்னு சொல்லுற ? அவனுக்கும் காலேஜ்வேலை எல்லாம் செட் ஆகிடுச்சா "
" இல்லை அண்ணா ... நான் மட்டும்தான் முதலில் வரேன் .."
" ஓ " என்றவனுக்கு ஏதோ சரியில்லை என தோன்றியது ...
"சரிடா .. இங்க மிட்னைட் ஆச்சு ..நா விடிஞ்சதும் இத பத்தி பேசுறேன் "என்று போனை வைத்த சித்தார்த் உடனே அருளின் போனுக்கு அழைத்தான்... அருளுக்கு போர்வையை போர்த்திவிடும்போதே அவனது செல்போனை எடுத்து விட்டிருந்தாள் சாஹித்யா .. இப்போது சித்தார்த் போன் செய்யவும்
" அண்ணா , நான்தான் பேசுறேன் .. இந்த புலன்விசாரணை வேலையை விட்டுட்டு சீக்கிரமா நான் வர்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க "என்றபடி போனை வைத்தாள் அவள் ..கணவனின் திருதிருவென பார்வையில் ஒருவாறு நடந்ததை யூகித்த ஹரிணி ,
" இப்போ என்னத்தை சொதப்பின , சொதப்பல் சித்து ?"என்றாள் ...நடந்ததை அவன் சொல்லவும் ஹரிணி கலகலவென சிரிக்க, சிரிக்கும் அவளது இதழ்களுக்கு இதழ்களால் தண்டனை கொடுத்தான் கணவன் அவன் ..
இங்கு தன் பெரியப்பாவின் மகனிடம் பேசி முடித்தவள் அருள் அருகே சென்று நின்றாள் ..
" என்னால உன்னை வெறுக்க முடியாது அருள் .,அதே நேரம் நீ பண்ணதை ஈசியா எற்றுக்க முடியல ... நான் உன்னைவிட்டு போறேன் " என்றாள் மானசீகமாய் ...
அதே காலைவேளையில், சீக்கிரமாய் காலைகடன்களை முடித்துவிட்டு, பூஜை அறையில் வழிபாட்டில் இருந்தாள் கவிமதுரா .. அன்று வானதிக்கும் உறக்கம் வராததால் காலையிலேயே எழுந்துவிட்டிருந்தாள் ..
" குட் மோர்னிங் அண்ணி "
" குட் மோர்னிங் வானதி ..சீக்கிரமா எழுந்துட்டியே "
" சும்மாதான் அண்ணி "
" .ம்ம்ம் வானதி நான் ஒன்னு கேட்கவா ?"
" சொல்லுங்க அண்ணி !"
" நான் வருண் அண்ணாகிட்ட சொல்லிட்டு இன்னும் ரெண்டு நாளில் ஊருக்கு போலாம்னு இருக்கேன் ..நீயும் வர்றியா ?"
" இவ்வளவுதானே ? கண்டிப்பா வரேன் அண்ணி "
" ம்ம்ம்"
"...."
" வானதி "
" சொல்லுங்க "
" நேத்து பார்த்தவங்கள பத்தி நிஜம்மாவே உனக்கு தெரிந்து கொள்ளனும்னு தோணலையா ?"
" சொல்லனும்னு நினைச்சா , நீங்களே சொல்லுவிங்களே அண்ணி " என்றாள் அவள் தெளிவாய் ..
" ஆபிஸ் போகணுமே .... ஊருக்கு போற வழியில் சொல்லுறேன் " என்றாள் கவிமதுரா ...
ஒரு பிரச்சனை தீர்ந்து கொண்டிருக்கிறது என்று சந்தோஷபடுவதா ? அல்லது நேற்று அர்ஜுன் சொன்னதை வைத்து அருள்- சாஹித்யா விஷயத்தை எண்ணி வருத்தபடுவதா என்ற குழப்பத்தில் இருந்தாள் வானதி ..
அதே நாள் அவசரமாக தயாராகி கொண்டிருந்த கணவனை பார்த்தாள் சைந்தவி ..மனைவி தன்னையே ரசித்து கொண்டிருப்பதை அவனும் கவனிக்காமல் இல்லை ..
" என்ன, மை டியர் லவ்வர் சைட்டிங் எல்லாம் பயங்கரம்மா இருக்கு "
" என்னது லவ்வரா ?"
" ஹா ஹா கல்யாணம் ஆகதவன் லவ்வரை பொண்டாட்டின்னு சொல்லலாம் .. கல்யாணம் ஆனவன் பொண்டாட்டியை லவ்வர்ந்னு சொன்னா தப்பா ?"
" ஹா ஹா உங்க தம்பியோடு எது எதில் போட்டிக்கு நிக்கனும்னு வரைமுறை இல்லையா உங்களுக்கு ?"
" சரி அதைவிடு ..நீ சொல்லு ..மாமா எப்படி இருக்கேன் "
" ம்ம்ம்ம் சும்மா டக்கரா இருக்கீங்க .. " என்று கண்ணடித்து அவனை வசீகரித்தாள் அவள் .
ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்
செண்டிம்மீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அவ சிரிச்ச சிரிப்புல நூறு பேரு செத்து போயிட்டான் ..
அயோயோயோ
என்று பாடிக்கொண்டே அலறினான் சுபாஷ் .. எல்லாம் நம்ம சைந்தவியின் கைவண்ணம் தான் ..
" நான் சிரிச்சா நூறு பேரு சாகுற மாதிரி இருக்கா " என்றபடி அவன் முதுகில் இரண்டடி போட்டாள் ..
" ஹே காதலி வலிக்கிறது டீ " என்று வலுக்காட்டாயமாய் அவளது கரங்களை பிடித்தவன் அவள் நெற்றியில் ஆசையாய் முத்தமிட்டான் ..
" போய்ட்டு வரவா டா ?"
" ஆபிஸ்க்கு போய்ட்டு வர இவ்வளவு பில்டப்பா ?"
" இல்லை .. விக்ரமை பார்க்க போறேன் "
அவன் பெயரை கேட்டதுமே சைந்தவியின் முகம் இருண்டது ..
" எதுக்கு அங்க ? சண்டை போட போறிங்களா ? என்னங்க வேணாமே "
" ஐயோ லூசு காதலி .. அப்படி எல்லாம் இல்லை ..இதோ இந்த பைல்ல தான் அந்த புது காண்ட்ராக்ட் இருக்கு ... இதுக்காகத்தானே என் உயிரை என்கிட்ட இருந்து எடுத்துக்க பார்த்தான் ..உன்னையும் பாப்பாவையும் விட எனக்கிது முக்கியம் இல்லன்னு சொல்லி கொடுத்துட்டு வர போறேன் ?"
" நிஜம்மா அவ்வளவு தானா ?"
" உன் சுபாஷ் சொன்னா சொன்னதுதான்னு உனக்கு தெரியாதா டார்லிங் "
" சரி ..அப்போ போயிட்டு வந்ததும் எனக்கு உடனே போன் பண்ணுறிங்களா ?" என்றாள் அவள் சோகமாய் ..
" அதுக்கு ஏன் உன்முகம் சுண்டக்காய் சைஸ் ல இருக்கு ? சுபாஷ், விக்ரமை பார்குறான் , பைலை கொடுக்குறான் அப்டியே ரிட்டர்ன் வந்து என் சைந்தவி குட்டிய பீச்சுக்கு கூட்டிட்டு போறான் ... ஓகே யா " என்று பேரம் பேசி அவளை சமாதானம் படுத்தினான் சுபாஷ்..
ஆனால் அவன் சொன்னது மட்டும்தான் நடக்குமா ? அடுத்த அத்யாயத்தில் பாப்போம் ..
தவம் தொடரும்
{kunena_discuss:838}