"நீயுமா?"
"ஆமா...சாரை பிரம்மச்சாரியா விடுறா மாதிரி இல்லை!சீக்கிரம் சொல்லு!"
"ம்..அப்போ!நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்காக ஒரு பெண்ணை பெத்து கொடு!கல்யாணம் பண்ணிக்கிறேன்!"
"என்னடா நக்கலா?"
"லைட்டா!"
"ராகுல்?"
"மாயா...கம் ஆன்!என் வாழ்க்கைக்கு என்ன குறை?தேவையில்லாம என் சுதந்திரத்தை நான் எந்த பொண்ணு கூடவும் பங்கு போட விரும்பலை!"
"அதுமட்டுமில்லாம என் மனசுல காதல் அப்படிங்கிற விஷத்தை நான் விதைக்க மாட்டேன்!"
"காதல் உனக்கு விஷமா?"
"பின்ன அமுதமா?"
"அப்போ அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் நடுவுல இருக்கிற காதல் கூட விஷமா?"-அவன் அமைதி காத்தான்.
"அவங்க விஷத்தையும் அமுதமா மாற்றினாங்க!என்னால அது முடியாது!"
"ஏன்?"
"என் பிறப்பை பற்றி உனக்கும் தெரியும்ல!என் அப்பாவுக்கு அந்தக் குற்ற உணர்ச்சி இருக்கோ இல்லையோ!எனக்கு உண்டு!!"
"ராகுல் புரிஞ்சிக்கோடா!"
"நான் வீட்டுக்கு கிளம்புறேன்!இனி என் கல்யாணத்தைப் பற்றி எடுத்தீங்கன்னா நான் இங்கே வரவே மாட்டேன்!"-பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.அவன் செல்வதையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா.
கடையும் இந்த பார்கடலில் காதல் என்பது அமுதா?விஷமா?
காதலை அமுதென்று எடுத்துக் கொள்வோம்..
அதனால் வாழ்வினைப் பெற்றவர்கள் பலர்!
உலகினை வென்றவர் பலர்!
உணர்வுகளை ரசித்தவர்கள் பலர்!
உறவுகளை மதித்தவர்கள் பலர்!
அழகிய குளத்தில் பூத்திருக்கும் வெள்ளை தாமரையாய் காதல்!!!
குளிர்ந்தக் காற்றில் உரைந்துள்ள பனித்துளியாய் காதல்!!!
இருகல் உரசிட உதித்தெழும் பவித்ர அக்னியாய் காதல்!!!
காதலை நஞ்சாய் எடுத்துக் கொள்வோம்!!!
புராணங்களில் திவ்யத்துவம் வாய்ந்த இந்துமத வேதம் ஸ்ரீ வைத்தியநாதர் நஞ்சினை உண்டு உலகினை காத்து மகத்துவம் பெற்றார் என்று கூறும்!
மகத்துவம் வாய்ந்த கிறிஸ்துவ வேதத்தில் ஆதியில் தோன்றிய மனிதன் விலக்கப்பட்ட கனியினை உண்டு ஆதாமானான் என்றது!
தனித்துவம் வாய்ந்த இஸ்லாமிய வேதம் அபூபக்கர் என்ற மகான் நஞ்சினால் கிடைப்பெற்ற இறைவனின் தரிசினத்தை உரைக்கிறது!
இப்போது நீங்கள் சொல்லுங்கள் காதல் அமுதமா?விஷமா?அல்லது கடையப்பட்ட பாற்கடலா??
தொடரும்
{kunena_discuss:877}