"கம் இன்!"-ஒரு கம்பீர குரல் கேட்டது.ராகுல் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.அவன் தீக்ஷாவை கவனிக்கவில்லை.
"ஏ..லூசு!என்ன இவ்வளவு நேரம் கழித்து வர?சரி...என் பென்டிரைவ் பார்த்தியா?"-தீக்ஷா ஒன்றும் புரியாமல் நின்றாள்.
"என்னடி கோபமா?நான் தான் அப்போவே ஸாரி கேட்டேனே!"-அவன் திரும்பாமலே பேச,வந்திருப்பது யாரென்று அவனுக்கு தெரியவில்லை.
"எக்ஸ்யூஸ்மீ சார்!"-அவள் குழப்பத்தோடு அழைக்க,இவன் சந்தேகமாக திரும்பினான்.தீக்ஷாவை பார்த்ததும் பேச்சிழந்து போனான்.
நான்கு கண்களும் சந்தித்துக் கொள்ள,மொழிக்கு பதில் மௌனமே அங்கு பாஷையாய் மாறியது.
"நீங்க?"
"ஐ ஆம் நியூலி அபாயிண்டட்!"
"நியூலி அபாயிண்டட்டா?"-அவன் குழப்பமாக தன் கைப்பேசியை எடுத்து மாயாவை அழைத்தான்!!!
"என் கேபினுக்கு வா மாயா!"-என்று இணைப்பைத் துண்டித்தான்.
"ஸாரி...உட்காருங்க!"
"இல்லை பரவாயில்லை!"
-அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மாயா வந்தாள்.
தீக்ஷாவை பார்த்தும்,பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
"மாயா!"
"ஸாரிடா!சொல்ல மறந்துட்டேன்!இவங்க மிஸ் தீக்ஷா ரவிக்குமார்! நியூ அபாயிண்டட் ரிப்போட்டர்!"
"ஸாரி தீக்ஷா!இவர் தான் இந்த பிரஸோட எம்.டி.!!!ராகுல் சரண்!நீங்க வருவதை இவர்கிட்ட சொல்ல மறந்துட்டேன்!அதான்,இந்த குழப்பம்!"-இருவரும் சற்றே இயல்பாயினர்.
"எனிவே,உங்க கேபின் பக்கத்துல இருக்கு!நீங்க அங்கே போகலாம்!நான் இவன்கிட்ட திட்டு வாங்கிட்டு ஒரு 5 நிமிஷத்துல வந்து டீடைல்ஸ் தரேன்!"-தீக்ஷாவிற்கு மாயாவை பிடித்து போனது.
"தேங்க்யூ!"-என்று அவள் வெளியேறினாள்.
அவள் வெளியேறியதும்,
"ஏன்டி ஒரு வார்த்தைக்கூட இதுப்பற்றி சொல்ல மாட்டியா?"-என்று ராகுல் கத்துவது காதில் விழுந்தது.
"இருடா!டென்ஷன் ஆகாதே!"
"நான் நீன்னு நினைத்து அந்தப் பொண்ணு வாடி,போடின்னு வேற கூப்பிட்டுடேன்!"
"நீ கூப்பிடாம வேற யார் கூப்பிடுவா?"
"எது?"
"ஒண்ணுமில்லை...கன்டினியு!"
"ஐயோ!மாயா!"
"இருடா!!தெரியாம தானே சொன்ன?"
"நான் ஸாரி கேட்டேன்னு கேளு!"
"ஓகே!!ஓகே!!"-மாயா சிரித்தப்படி விலகினாள்.ராகுலின் இதயத்துடிப்பு ஏகபோகமாய் ஏறியது!!
அவள் மனதில் தீக்ஷாவின் முகம் தெளிவாக பதிந்தது!!!
தொடரும்
{kunena_discuss:877}