(Reading time: 12 - 23 minutes)

"நான் இப்போவே நிறைவேற்றிக்கிறேன்!நான் எது ஒண்ணு வேணும்னு ஆசைப்பட்டாலும் அதை அடைந்தே தீருவேன்!"-சங்கர் நிலாவை தன்னருகே இழுத்தான்.

அவள் அவனது கன்னத்தில் பளாரென்று அறைந்தாள். இதை எதிர்ப்பார்க்காதவன் கோபமாக அவளை தள்ள நிலா கதவருகே விழுந்தாள். அவள் விழவும் யாரோ உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.வந்தவரின் உறுதியான கரம் அவளை தூக்கியது. நிமிர்ந்துப்பார்த்தவளின் கண்கள் திகைத்தன.வந்தவன் ரஞ்சித்!!!

அவன் கோபமான பார்வையை அவள் மேல் வீசினான். சங்கர் ஒன்றும் புரியாமல் நின்றான். ரஞ்சித் கோபத்தில் நிலாவை ஓங்கி அறைந்தான்.அவன் அடித்த அடி சங்கருக்கே வலித்திருக்கும்!!! சத்தம் கேட்டு நிலாவின் சிற்றன்னை ஓடிவந்தார்.

"யாருடா நீ?"

"இவளுக்கு தாலி கட்டினவன்!"-ரஞ்சித்தின் கோபமான பேச்சில் அவனே தடுமாறினான்.

"உனக்கு என்ன தைரியம் இருந்தா!என் மனைவிக்கிட்ட தவறா நடந்துப்ப?"

"நிலா என்னோட பொருள்!"

"அவ எனக்கு சொந்தமானவள்!"-அங்கு விவாதம் புரிந்த இருமனமும் பகை கொண்டன.

ரஞ்சித் கோபமான பார்வையை சங்கர் மீது வீசி நிலாவின் கரம் பற்றினான்.

"மறந்துக்கூட அவ நிழலை கூட நெருங்கணும்னு நினைக்காதே!மீறி நினைத்தால் அன்னிக்கு தான் உனக்கு கடைசி நாள்!!!"-நிலாவின் கரம் பற்றியவன் அவளை இழுத்துக்கொண்டு சென்றான்.அவன் பற்றிய கரம் வலித்தது!!ஆனால்,மனமோ ஆனந்தம் கொண்டது.

ஞ்சித் ஏதும் பேசாமல் காரில் ஏறினான்.நிலா அவனருகே அமர்ந்தாள்.அவன் கோபமாக பயணத்தை ஆரம்பித்தான்,அவள் பக்கம் திரும்பவுமில்லை.நிலா அவனையே பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்.

"ரஞ்சு!"

"பேசாதே!நான் கோபத்தோட உச்சக்கட்டத்துல இருக்கேன்!"

"ரஞ்சு ப்ளீஸ்!"-அவன் காரை நிறுத்தினான்.

"எத்தனைமுறை சொல்வேன்!பிரச்சனைன்னு தெரிந்தால் உடனே சொல்லுன்னு!நான் அங்கே வரலைன்னா..."

"செத்திருப்பேன்!"-அவன் பேச்சிழந்துப் போனான்.

"நான் உன் போனுக்கு ட்ரை பண்ணேன்!ஆனா லைன் கிடைக்கலை!"-அப்போது தான் நினைவு வந்தது,ஒரு வாரமாக அவன் ஊட்டியில் இருந்ததால் அவன் அடிக்கடி தொடர்பு நிலையில் இல்லை!!

"உன்னை யார் அங்கே இருக்க சொன்னா?"

"அப்பா!"-அவன் அருகிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து தலையில் அடித்து கொண்டான்.

"எப்போதும் பதிலை தயாரா வைத்துக்கொள்வாயா?"

".............."

"மீனா மேம் தான் உன் பார்க்காம வருத்தப்பட்டாங்க!அதான் நான் வந்தேன்!நல்லவேளை சரியான சமயத்துல வந்தேன்!!"-அவள் அமைதியாக இருந்தாள்.

"வலிக்குதா?"

"என்ன?"

"நான் அடித்தது?"

"இல்லை...சந்தோஷமா இருக்கு!"

"எது?"

"உன்கிட்ட ஒண்ணு சொல்லட்டா?"

"ம்.."

"ஐ லவ் யூ!"-நிலா அவன் மீது சாய்ந்துக்கொண்டாள்.

அவனிடம் பதில் இல்லை.பதில் கூறவும் தெரியவில்லை.

அங்கு சுதர்சன சக்கரம் கொண்ட வீரமானது மயக்கும் குழலோசையின் முன்னால் தோற்றுத்தான் போனது!

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.