(Reading time: 23 - 46 minutes)

றைக்குள் இருந்த சிவனேஸ்வருக்கோ நிலை கொள்ளவில்லை. தன்னை பார்த்தும் பாராதது போல் ஒதுங்கி செல்லும் ஜீவகன் இன்று சிரித்துப் பேசுகிறான். தன்னைக் கண்டாலே ஏதோ வில்லனைப் பார்ப்பது போல் முகம் சுளிக்கும் மனைவி அவனுடன் கலகலத்து சிரித்து பேசியது கோபமூட்டியது. அதுவும் தன் தங்கையால் வில்லனாக சித்தரிக்கப்பட்டிருந்தவனோடு மனைவி பேசியது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

‘இரண்டு உம்மணா மூஞ்சிகளுக்கும் தான் செட்டாகும் போல். மத்தவங்க கிட்ட சிரிக்க முடியலை. அதுங்க ரெண்டும் எப்படி பேசிச் சிரிக்குதுங்க.’ ஆதங்கப்பட்டான்.

உடனேயே அவன் மனம் கண்டித்தது.

‘இல்லையே. அப்பாவைக் கண்டதும் அவள் முகம் பளபளத்ததே. சந்தியாவைப் பார்த்த போது பாச மழையை பொழிந்தாளே. அவள் அன்னையைக் கண

...
This story is now available on Chillzee KiMo.
...

நீங்க தப்பு பண்றீங்க.”

“தப்புதான். ஆனால் ரொம்ப அழகான தப்பு.”

பேசியவாறே அவளை நெருங்கியவன் அவளை இறுக்க அணைத்துக்கொண்டான். அவனின் பிடியை விட்டு விலக போராடினாள். அவன் வலிமை முன் ஏற்கனவே அவனை கண்டதில் மனம் நெகிழ்ந்திருந்த அவளால் போராட முடியவில்லை. அவன் அணைப்பு இறுகிக் கொண்டே போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.