“ப்ளீஸ் ஜீவன். விடுங்க. நீங்க இப்ப ஒரு குழந்தைக்கு அப்பா. அதை மறந்துடாதீங்க. நான் சந்தியாகிட்ட சொல்லிட்டு ஊருக்கு போயிடறேன்.”
குழந்தைக்கு அப்பா என்ற உடன் கொஞ்சம் தளர்ந்தவன் அவளை அப்படியே உதறினான். அந்த தடுமாற்றத்தில் கீழே விழுந்தாள்.
“கண்டிப்பா போயிடுவேல்ல.”
“கண்டிப்பா போயிடறேன்.” அழுதவாறே கூறினாள்.
“போகலைன்னா எனக்கு கஷ்டமில்லை. எனக்கு வசதியா தனியா வீடெடுத்து வேற தங்கியிருக்கே. என்ன நான் அப்படி இப்படி நடக்கிறேன்னு தெரிஞ்சா மாமனார் வீட்டுல சொத்து குடுக்க மாட்டாங்கெ. அதான் நல்லவனா வேசம் போட வேண்டியாதாயிருக்கு.”
அவன் போன சற்று நேரத்தில் வடிவு வந்தாள். அங்கே வருவதற்கு முன்பே ஜீவகன் செல்வதை பார்த்தாள்.
வடிவு உள்ளே நுழைந
...
This story is now available on Chillzee KiMo.
...
தோ யோசனையாக இருந்தாள்.
“நீ நல்லவதான் அண்ணி. ஆனால் அவன் எப்படிப்பட்டவன்னு உனக்கு சொல்லிட்டேன். உனக்கு உன் புருசன்தான் முக்கியம். நீ அண்ணனை நல்லா கவனிச்சுக்கோ. மத்தவங்க எப்படியோ போகட்டும்.”
“காலையில் தலை வலியோட வந்தார். அதான்.” தயக்கத்துடன் கூறினாள்.
“அதெல்லாம் நடிப்பு.”