நந்தினி எழுந்து அமர்ந்தாள். இதற்கு மேலும் தனியாக படுத்திருந்தால் குழப்பம் அதிகமாகும் என்று தோன்றவும், தலையணையை எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்றாள்.
அங்கே சரஸ்வதியும், விஜயாவும் பழைய கதைகள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்...
“அம்மா....!”
“என்ன நந்தினி, தூங்கலையா?”
“நான் தங்கி இருந்த ஊருல இப்போ பகல் நேரமாச்சே, ஜெட் லேக் போலருக்கும்மா... தூக்கமே வரலை.... நான் உங்க மடியில படுத்துக்கட்டுமா?”
“வா வா வந்து படு.... உனக்கு வயசென்ன ஆகுது... இன்னும் இப்படி சின்ன குழந்தை போல இருக்க!!! சீக்கிரமே கல்யாணம் செய்துக்கோடா...”
அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்தவளின் பார்வை தானாக கழுத்தில் இருந்த செயினின் மீது செல்ல,
“ப்ச்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கசப்பான நினைவுகளை கொண்டு வந்தது...
வெளியே எஸ்-ஸின் சிரிப்பு சத்தம் கேட்டது....
என்ன இருந்தாலும், ‘எந்த நந்தினி’ என்று கேட்டவன் தானே இவன்... அது மட்டுமா, என்ன அழகாக பேசி வீட்டை விட்டு அவளை வெளியேற்றினான்... அதுவும் எப்படி.... அது தான் அவளுக்கும் நல்லது எனும் ‘லாஜிக்’ வேறு.....