யோசனையுடனே சமையலறை பக்கம் சென்றவளின் முகம் கோபத்தின் சாயலுடனே இருந்தது....
“ஹேய் நான்ட்ஸ் என்ன கோபமா இருக்க போலருக்கே...”
எஸ்-ஸின் கேள்வியை சட்டை செய்யாமல் சென்று அமர்ந்தாள் அவள்.
அவள் வந்து விட்டதை கவனித்து காபி எடுத்து வந்து கொடுத்த சரஸ்வதி, அவனுக்கு பதில் சொன்னாள்.
“வேறென்ன, நான் காபியை கொண்டு போய் கொடுக்கலையே அதுக்கு தான் கோபம்.... அவளுக்கு சாப்பிட எல்லாம் எடுத்து கொடுக்கனும்... சாப்பிட்டீயான்னு கேட்கணும்.... இதுக்கெல்லாம் கூட மேடம்க்கு மூக்கு மேல கோபம் வரும்....”
எஸ்-ஸின் மனம் சுட்டது....!
நந்தினிக்கும் கிட்டத்தட்ட அதே பழைய நினைவுகளே....! அவளின் முகம் மேலும் கடினமுற்றது....
...
This story is now available on Chillzee KiMo.
...
யுது... சரி அதெல்லாம் அப்புறம்... இப்போ ஒரே ஒரு தடவை எனக்காக என்னை உன் ஸ்பெஷல் செல்ல பேர் வச்சு கூப்பிடு பார்க்கலாம்....”
“அது ஒன்னும் என் செல்ல பேர் இல்லை.....”
“இருந்துட்டு போகட்டும்... நீ சொல்லேன்..... நான் வேற உங்க அம்மா கிட்ட நிறைய நேரம் பேசனும்... எதையாவது உளறிடுவேன்...”