தங்கள் அறைக்குள் நுழைந்தவள் கணவனை முறைத்துப்பார்த்தாள்.
“என்னை எதுக்கு முறைக்கிறே? அதான் காரணத்தை அம்மா சொன்னாங்களே?”
“அவங்க சொன்னா நீங்க கேட்பீங்களா? ஒரு கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இருக்கலாமா?”
“நீ அப்படித்தான் நடந்துக்கிறியா?”
“சரி! நம்ம பிரச்சினையை பின்னாடி வச்சுப்போம். நந்தினிக்கு என்னாச்சு?”
“எல்லாம் சகவாச தோசம்தான். அவளுக்கு ஏத்த மாதிரிதானே அவளோட நட்பு வட்டமும் இருக்கும். நிறைய பணம் நகையோட அவளைப் பார்த்ததும் சலனம் வந்துடுச்சு. போட்டுத்தள்ளிட்டாங்க. அடையாளம் தெரியக்கூடாதுன்னு உடம்பையும் ரொம்ப சிதைச்சுட்டாங்க.” வருத்தமுடன் கூறினான்.
“ச்சே! எப்படி எல்லாம் ஆசைப்பட்டிருக்கா. அவ வாழ்க்கை இப்படியா ஆகனும்? ஆமா உங்
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்திருந்த சாவித்திரி தனிமையாக கிடைத்த கொஞ்ச நேரத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தாள்.
“என்ன தனிக்குடித்தனம் வந்த உடனே என் மகனை மயக்கி கைக்குள்ள போடலாம்னு நினைச்சியா. நீ கிளம்பப்போற நேரம் வந்துடுச்சு. மூட்டையைக் கட்டிக்கிட்டு கிளம்பத் தயாரா இரு” என்றுவிட்டு சென்றிருந்தாள்.